ஜனவரி 1ம் சித்திரை 1ம்...
ஆங்கிலப் புத்தாண்டை ஆடம்பரமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப் பழகிக் கொண்ட நாம், தமிழ்ப் புத்தாண்டைக்கொண்டாடுவதையே கூட மறந்து விட்டோம். இதனை உயிர்ப்பிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதில்ஐயமில்லை.
கேரள மாநிலத்தில் புத்தாண்டை மிக விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். "விஷூக் கனி என்ற பெயரில் கொண்டாடப்படும்அவர்களின் புத்தாண்டுக்கும் நமது புத்தாண்டுக்கும் நிறையவே தொடர்புண்டு.
இரண்டுமே ஒரே நாளில் தான் கொண்டாடப்படுகின்றன. கேரளாவில் விஷூக் கனிக் கொண்டாட்டத்தின் போது முக்கனிகளைபடையல் செய்கின்றனர். புத்தாடை அணிந்து, விதவிதமாய் உண்டு, மகிழ்ந்து புதிய ஆண்டை இனிமையாகத் துவங்குகின்றனர்.மிகச் சிறப்பான பெரும் விழாவாகவே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இதைப் போலவே தமிழகத்திலும் முன்பெல்லாம் தமிழ்ப் புத்தாண்டு மிக விமர்சையாகக் கொண்டப்பட்டு வந்தது. இப்போதுகிராமங்களில் தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்ப் புத்தாண்டு நாளில் (சித்திரை 1), கிராமங்களில் சர்க்கரைப் பொங்கல் படைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில் புத்தாண்டை கொண்டாடுவதில் ஆர்வம் ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. இது மிக வருத்தமானவிஷயம்.
டிவியில் சிறப்புப் பட்டிமன்றங்கள், கவியரங்குகள், சிறப்பு கவுண்ட் டவுன் பாட்டுக்கள், திரைப்பட ரிலீஸ் என்பதோடு தமிழ்புத்தாண்டை நகர்ப் புறங்களில் முடித்துக் கொள்கிறார்கள்.
நகர்ப் பகுதிகளில் ஜனவரி-1க்குக் கிடைக்கும் மரியாதை தமிழ் புத்தாண்டுக்குக் கிடைப்பதில்லை. இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும்.