வாழ்க தீபாவளி, பொங்கலும் வாழ்க!
க.தனுஷ்கோடி
தமிழகத்தைப் பொறுத்தவரை தீபாவளிக்கும் பொங்கலுக்கும் இடையே 'அன் அபீசியல்' சண்டையே நடந்து வருகிறது.
தீபாவளி நகர்ப் பகுதிகளின் பண்டிகையாகிவிட்டது. தமிழர் பண்டிகையான பொங்கல் வெறும் கிராமப் பண்டிகையாக சுருங்கிவிட்டது.
இதற்குக் காரணம் போனஸ். நகர்ப் புற அலுவலகங்ளில் தீபாவளிக்குத் தான் போனஸ். ஆனால், பொங்கலின்போது தான் விவசாயிகளுக்கு இயற்கை போனஸ்தருகிறது.
நகர்ப் புறங்களில் தீபாவளிக்குத் தான் புது டிரஸ். பொங்கலுக்கு ஒரு 3 நாள் லீவு கிடைக்கும். குக்கரில் பொங்கல் சமைத்து சாப்பிட்டுவிட்டு டிவி முன்உட்கார்ந்துவிடுகிறார்கள். பேஸ்ட் துணையுடன் வாழும் நமது பற்கள் கரும்பு கடிக்க எல்லாம் நம்மை அனுமதிப்பதில்லை.
ஆக, கிராமங்களில் தான் பொங்கல் 'வாழ்ந்து' கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் என பொங்கலுக்கே உரிய சிறப்பு பந்தயங்களுடன் கிராங்களில்மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. நகர்ப்புறவாசிகள் இவற்றை எல்லாம் ராமராஜன் படத்தில் பார்த்ததோடு சரி.
பொங்கலுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு என்று ஒரு தொகை கொடுக்கிறது. இருந்தாலும் அந்தத்தொகை கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்அளவுக்கு பெரிய தொகையாக இருப்பதில்லை.
ஆனால், கிராமங்களில் நிலைமை வேறு. தீபாவளி நேரத்தில் அறுவடை நடைபெற்றிருக்காது. இதனால் உழவர்களின் கையில் காசு இருக்காது.காலமெல்லாம் கழனியில் உழன்ற உழவர்கள் பொங்கல் நேரத்தில்தான் அறுவடை முடித்து காசையே பார்ப்பார்கள். எனவே தீபாவளிக்கெல்லாம்அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை.
நகரமோ, கிராமமோ நிதி நிலைமை தான் பண்டிகைகளை முடிவு செய்கின்றன.
கொண்டாட்டங்கள் மனிதன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளத் தான். எனவே அது தீபாவளியாக இருந்தாலும், பொங்கலாக இருந்தாலும், மனிதனின்மனம் குளிர்ந்தால் சரி.
வாழ்க தீபாவளி. பொங்கலும் வாழ்க!.












Click it and Unblock the Notifications