தியானத்தில் தொலைவோம்..
கிட்டத்தட்ட 10,522 செய்யுள்களைக் கொண்டது ரிக் வேதம். வேதங்களுக்கு எல்லாம் இதயம் போன்றது இது.
ரிக் வேதத்தில் உள்ள இசை சார்ந்த 2,000 தெய்வ வணக்கப் பாடல்களைத் தேர்வு செய்து கொஞ்சம் மாற்றி எழுதப்பட்டது சாமவேதம். அதே மாதிரி தான் யஜூர் வேதமும். கிட்டத்தட்ட 2,000 செய்யுள்களைக் கொண்டது.
அதர்வண வேதம் கொஞ்சம் மாறுபட்டது. வழிபாடுகள், வணக்க முறைகள் என இந்து பூஜை முறைகளின் அன்றாடநடைமுறைகளைப் பேசுகிறது இந்த வேதம்.
இதில் ரிக், அதர்வண வேதங்களை தீவிரமாக ஆராய்ந்து யஜூர்- சாம வேதங்களின் இசைப் பின்னணியுடன்உருவாக்கப்பட்டுள்ளன இரு வேத சி.டிக்கள்.
ஒன்று, கேட்ட நிமிடத்திலேயே நம்மை ஒருமுகப்படுத்தி மனதை அமைதியில் ஆழ்த்திவிடுகிறது.
மன நிம்மதி தவிர சிசு நிலையிலேயே வேத சப்தத்தை குழந்தைக்குப் போதித்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுஇரண்டாவது சி.டி.
சென்னையைச் சேர்ந்த இந்தியாவின் மிகச் சிறந்த வேத விற்பன்னர்களில் ஒருவரான ஸ்ரீதத்வமசி தீக்ஷித்தின் படைப்புகள் தான்இந்த சிடிக்கள்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்பட வெளிநாடுகளில் இதனை விற்கும் உரிமையை இன்டியாஇன்போவும்தட்ஸ்தமிழ்.காமும் பெற்றுள்ளன.
நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் ஆன் லைன் மூலம் இந்த சி.டிக்களை எளிதாய் வாங்கலாம்.