பூஜை முறை
சரஸ்வதி கல்விக்கு அதிபதி என்றாலும் சரஸ்வதிக்கென்று தனி கோவில் தமிழகத்தில் கிடையாது. காஞ்சிபுரத்திற்கு அருகில் ஒரு கோவில் உள்ளது.
சரஸ்வதிக்கென்று தனி கோவில் கிடையாது என்றாலும் பெரும்பாலான சிவஸ்தலத்திலும் சரஸ்வதிக்கென்று தனி சன்னிதி இருப்பதை காணலாம்.சரஸ்வதி பூஜையன்று கோவில்களில் உள்ள சரஸ்வதி விக்கிரகத்திற்கு வெண் நிற புடவை சாற்றப்பட்டு. தாமரை பூவால் அர்ச்சனை செய்யப்படும்.
சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.
வீட்டில் நவராத்திரி நாட்களில் பூஜைகள் செய்ய இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை தினத்தன்று பூஜை செய்தாலே மற்ற நாட்களிலும் பூஜை செய்த பலன் கிடைக்கும்.சரஸ்வதி தினத்தன்று காலையில் வீட்டில் மாக் கோலம் போடப்ப்டடு, மாவிலை தோரணங்கள் கட்டப்படும்.
வீட்டில் படிப்பவர்கள் தங்கள் பாடப்ப்புத்தகங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து பூஜையில் வைப்பர். அன்றைய தினம் முழுவதும் எதையும் படிக்கமாட்டார்கள்.
அதே போல் தொழிற்சாலைகளிலும், இயந்திரங்கள் போன்றவற்றிற்கும் சிறப்பு பூஜை செய்யப்படும். இதற்கு ஆயுத பூஜை என்று பெயர்.
இதே போல் எல்லா வர்த்தக மையங்கள் கடைகள் போன்றவற்றிலும் தங்கள் வருமானத்திற்கு உதவும் பொருட்களுக்கு சிறப்பு பூஜை செய்வார்கள்.சரஸ்வதியின் அருள் இருந்தால்தானே புத்தி கூர்மை பெருகி எதிலும் சிறக்க முடியும்.
இந்த ஆண்டு (விஷு ஆண்டு) சரஸ்வதி பூஜையும்,. ஆயுத பூஜையும் ஐப்பசி மாதம் 8ம் தேதி (25.10.2001) வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி காயத்ரி:
ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரச்சோதயாத்
இந்த ஸ்லோகத்தை சொன்னால் அன்னை சரஸ்வதியின் அருள் பூரணமாக கிடைக்கும்












Click it and Unblock the Notifications