தை அம்மாவாசை: கடற்கரைகளில் மக்கள் வெள்ளம்
பிப்ரவரி 01, 2003
தை அம்மாவாசை: கடற்கரைகளில் மக்கள் வெள்ளம்
கன்னியாகுமரி:
தை அம்மாவாசையை ஒட்டி இன்று லட்சக்கணக்கான மக்கள் கடல்களில் புனித நீராடி பித்ருக்களுக்கு மரியாதை செலுத்தினர்.
தை அம்மாவாசையும், ஆடி அம்மாவாசையும் மிகப் புனிதமான தினங்களாகும்.
இதில் தை அம்மாவாசையன்று கடலில் குளித்து மறைந்த பெற்றோருக்கும் மூதாதையோருக்கும் அஞ்சலி செலுத்துவது மிகச்சிறந்தது என்பது ஐதீகம். இதன்படி இன்று கன்னியாகுமரியிலும் கலை நகரான பூம்புகாரிலும் கடலில் லட்சக்கணக்கான மக்கள்மூழ்கி எழுந்து மூதாதையோரை வணங்கினர்.
அதே போல அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்திலும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினர். இதற்காகபல்வேறு மாநிலங்களிலும் இருந்து மக்கள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.
இது தவிர திருச்சியில் காவிரியிலும் மூழ்கி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் மூதாதையரை வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications