திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று இரவு கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துஅருணாச்சலேஸ்வரரின் அருளைப் பெறும் நாள் கார்த்திகைத் தீபத் திருநாளாகும்.
சைவ சமயத் திருத்தலங்களின் தலைமைத் தளமாக விளங்குவது திருவண்ணாமலை ஆகும். இது பஞ்ச பூதத்தலங்களில் அக்கினித் தலமாகப் போற்றப்படுகிறது.
பார்வதி தேவி, கிரிவலம் வந்து கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று மலை உச்சியில் சிவபெருமானை ஜோதிவடிவமாக தரிசனம் செய்து அவரது இடப்பாகத்தில் அமர்ந்தார் என்று புராணம் கூறுகிறது.
இந்த நன்னாளைக் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று தீபத் திருவிழாகொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை மலை உச்சியில் உள்ள ஒரு ராட்சத விளக்கில் நெய்யிட்டு, தீபமேற்றப்படும். இதேபோலஅனைவரின் இல்லங்களிலும் அகழ் விளக்குகளால் அலங்கரித்து சிவனையும், அம்மனையும் வழிபடுவார்கள்.
இன்று நடைபெறும் தீபத் திருவிழா குறித்து திருவண்ணாமலையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, கோயில்உதவி ஆணையாளர் ஜெயராமன் கூறியதாவது,
மகா தீபத்தைக் காண கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றவர்களும், தர்ம தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களும்கோவிலுக்குள் ராஜகோபுரம் வழியாக வர வேண்டும். வி.ஐ.பி.பாஸ் வைத்திருப்பவர்கள் அம்மணி அம்மன்கோபுரம் வழியாக வர வேண்டும்.
இளம்பச்சை நிற அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் பே கோபுர வாசல் வழியாக வரவேண்டும்.
தீப தரிசனம் முடிந்த பிறகு அனைவரும் பே கோபுர வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும். இவ்வாறுஅதிகாரி ஜெயராமன் கூறினார்.