திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 4: மார்கழி மாதம் வந்தாலே ஆறு, குளமெல்லாம் நிரம்பி வழியணும்!
சென்னை: மார்கழி மாதம் நான்காவது நாள் இன்று! இந்த மார்கழியில் மழை வருவது குறித்து இந்த பாடல் விளக்குகிறது. வருண பகவானிடம் சிறுமிகள் எல்லாம் மழை கேட்டு வேண்டுகிறார்கள்.
மழை, இடி, மின்னலை அவர்கள் எதனுடன் ஒப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிலும் சிறுமிகளின் கோரிக்கையை ஏற்று மழையும் பெய்தது.

திருப்பாவை பாடல் 4
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: மழைக்கு அதிபதியான வருண பகவானே! நீங்கள் உங்களிடம் ஒரு சொட்டு தண்ணீரை கூட வைத்துக் கொள்ளாதீர். கடல் நீர் முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளுங்கள். பின்னர் கண்ணனின் கார்மேக வண்ணம் போல் கருத்து, சக்கரத்தை போல் மின்னலை வெட்டி, வலம்புரி சங்கு போல் இடி இடிக்க சார்ங்கம் எனும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளை போல் மழையை தாருங்கள். அந்த மழையால் இந்த உலகில் மகிழ்ச்சி பொங்கட்டும். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர் நிலைகளும் நிரம்பட்டும்!
திருவெம்பாவை பாடல் 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: முத்துப் போல் பற்களை கொண்ட அழகிய பெண்ணே, இன்னும் உங்களுக்கு பொழுது விடியலையா, என தோழிகள் கிண்டலாக கேட்க, அதற்கு தூங்கி கொண்டிருந்த அந்த பெண், கிளி போல் கொஞ்சி பேசும் எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என கேட்கிறாள். அதற்கு அந்த தோழிகள், "ஏன்டி உன் ஒருத்தியை எழுப்ப எத்தனை பேர்தான் வர வேண்டும். இனி மேல் நாங்கள் தலை கணக்கை எண்ணிக் கொண்டுதான் வர வேண்டுமா? சிவபெருமானை தரிசனம் செய்ய வந்த நிலையில் தலை கணக்கை எல்லாம் எண்ண முடியுமா, நீயே எழுந்து எண்ணிக் கொள் என்று அந்த தோழிகள், தூங்கிக் கொண்டிருந்த தோழியை கலாட்டா செய்கிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications