நாளை அட்சய திருதியை.. எந்த சிட்டியில் எந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்? இதுதான் ரொம்ப முக்கியம்
சென்னை: நாளை அட்சய திருதியை திருநாளை முன்னிட்டு எந்த நகரத்தில் உள்ள மக்கள் எந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம் என்று இங்கே விரிவாக கொடுக்கப்பட்டு உள்ளது.
அக்தி அல்லது அகா தீஜ் என்றும் பல்வேறு மொழிகளில் அழைக்கப்படும் அட்சய திரிதியா, ஆண்டுதோறும் ஜெயின் மற்றும் இந்து மதத்தில் வசந்த காலத்தை கொண்டாடும் விழாவாகும். இது பொதுவாக மே மாதத்தின் முதல் வாரத்தில் வரும். .

இந்தியாவில் உள்ள இந்துக்கள் மற்றும் ஜெயின் மதத்தினர் மூலம் அட்சய திரிதியை ஒரு புனித நாளாக அனுசரிக்கப்படுகிறது. தங்கம் வாங்குவது மட்டுமன்றி இந்த நாளுக்கு என்று பல சிறப்புகள் உள்ளன. இந்த ஆண்டு அட்சய திருதியை திருநாள் மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.
எங்கே எப்போது வாங்கலாம்: உங்கள் நகரத்தில் அக்ஷய திருதியை சுப முஹுர்த்தத்தை சரிபார்க்கவும்
காலை 06:03 முதல் மதியம் 12:31 வரை - புனே
காலை 05:33 முதல் மதியம் 12:18 வரை - புது தில்லி
காலை 05:45 முதல் மதியம் 12:06 வரை - சென்னை
காலை 05:45 முதல் மதியம் 12:06 வரை - கோவை
காலை 05:43 முதல் மதியம் 12:08 வரை - திருச்சி
காலை 05:40 முதல் மதியம் 12:01 வரை - நெல்லை
காலை 05:42 AM to 12:23 PM - ஜெய்ப்பூர்
காலை 05:46 AM to 12:13 PM - ஹைதராபாத்
காலை 05:34 AM to 12:18 PM - குர்கான்
காலை 05:31 AM to 12:20 PM - சண்டிகர்
காலை 04:59 முதல் 11:33 வரை - கொல்கத்தா
காலை 06:06 AM to 12:35 PM - மும்பை
காலை 05:56 முதல் மதியம் 12:16 வரை - பெங்களூரு
காலை 06:01 AM to 12:36 PM - அகமதாபாத்
காலை 05:33 முதல் மதியம் 12:17 வரை - நொய்டா.
அட்சய திரிதியா பின்னணி: அட்சய திரிதியா என்பது நீங்காத செழிப்பின் மூன்றாம் நாள் என்பதைக் குறிக்கிறது. இந்தியா மற்றும் நேபாளத்தின் பல பகுதிகளில் உள்ள இந்துக்கள் மற்றும் ஜெயின் மதத்தினர் புதிய முயற்சிகள், திருமணங்கள், தொண்டு மற்றும் தங்கம் அல்லது பிற சொத்து போன்ற முதலீடுகளுக்கு அட்சய திரிதியா நாளை மங்களகரமானதாக கருதுவார்கள்.
இறந்த உறவினர்களின் நினைவு நாளாகவும் இது உள்ளது. திருமணமான அல்லது திருமணமாகாத பெண்களுக்கு, தங்கள் வாழ்க்கையில் நிச்சயதார்த்தம் செய்யக்கூடிய ஆண்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யவும் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது.
பொதுவாக அட்சய திரிதியை வாரத்தின் இரண்டாம் நாள், அதாவது திங்கட்கிழமை (ரோகினி) வந்தால், அந்த அட்சய பண்டிகை மிகவும் மங்களகரமானதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் நோன்பு இருப்பவர்கள், தொண்டு செய்பவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள் நல்ல பலன்களை அனுபவிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
அர்த்தம் என்ன?: சமஸ்கிருதத்தில், அக்ஷய (अक्षय) என்ற வார்த்தையின் அர்த்தம் "செழிப்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி, வெற்றி" ஆகியவை "எப்போதும் குறையாது" என்பது ஆகும். அதே சமயம் திரிதியை (तृतीया) என்றால் "சந்திரனின் மூன்றாம் நாள்" என்று அர்த்தம்.
இந்து நாட்காட்டியில் வசந்த மாதமான வைசாகா மாதத்தின் மூன்றாவது சந்திர நாளில் இது வருவதால், இவ்வாறு பெயரிடப்பட்டது.












Click it and Unblock the Notifications