குரு பெயர்ச்சி 2024: மே 1ல் ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான்! ஆலங்குடியில் ஏற்பாடுகள் ஜரூர்!
ஆலங்குடி: உலக பிரசித்தி பெற்ற ஆலங்குடி குரு பகவான் கோயிலில் வரும் மே ஒன்றாம் தேதி குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
பஞ்சாங்கத்தின்படி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உலக பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குரு பகவான் சுவாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக இந்த கோவிலில் நடைபெறும்.

ஆலங்குடி மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குரு பகவானை தரிசிக்க வருவார்கள். அந்த வகையில் வரும் மே ஒன்றாம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்படும். மேலும் பரிகார ராசிகள் ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.
வரும் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மற்றும் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறும். குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட தகரத்தாலான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதற்காக கம்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒருவரது ஜாதகத்தில் கிரகத்தின் நிலையைப் பொருத்து அவரது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. கிரகங்களிலேயே சிறப்பாக கருதப்படுவது வியாழக்கிழமை. ஜாதகங்களில் குரு வலுவாக இல்லாவிட்டால் அந்த நபரது வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும். குருபலன் இல்லாமல் ஒருவர் எதுவும் செய்ய முடியாது.












Click it and Unblock the Notifications