வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு மட்டும் ஏற்றலாமா? திரியை எப்படி பயன்படுத்த வேண்டும்?
சென்னை: வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு மட்டும் ஏற்றலாமா என்பது பலருக்கு கேள்வியாக உள்ளது. அதாவது சிலர் காமாட்சியம்மன் விளக்கை மட்டும் வைத்திருப்பார்கள். அதை மட்டும் ஏற்றலாமா என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பூஜை அறை என்றாலே அதில் மங்களகரமாக விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். தினமும் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அது போல் கார்த்திகை மாதங்களில் மாலை நேரத்திலும் மார்கழி மாதங்களில் அதிகாலை நேரத்திலும் விளக்கு ஏற்றி வழிப்பட்டால் நன்மை கிடைக்கும்.

விளக்கில் நல்லெண்ணெய், நெய், பஞ்ச தீபம் விளக்கு ஏற்றும் எண்ணெய் உள்ளிட்டவைகளை கொண்டு விளக்கேற்றலாம். தினமும் ஏற்றிய ஒரே திரியை விளக்குகளுக்கு பயன்படுத்த வேண்டும். தினந்தோறும் விளக்குகளை கழுவ வேண்டும்.
பொதுவாக பூஜை அறையில் இரட்டை விளக்கை ஏற்றினால் அதிர்ஷ்டம் உண்டாகும். ஒற்றை விளக்கை ஏற்றக் கூடாது. அது போல் ஒற்றைப் படையில்தான் விளக்கை ஏற்ற வேண்டும் என்பதில்லை. இரு விளக்குகள் அல்லது அதற்கு மேல் எத்தனை விளக்குகளை ஏற்ற முடியுமோ அதை ஏற்றலாம்.
உதாரணமாக காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுகிறோம் என்றால் அதற்கு துணை விளக்கை ஏற்ற வேண்டும். ஒரு வேளை உங்களிடம் எக்ஸ்ட்ரா விளக்கு இல்லாவிட்டால் அகல் விளக்கையாவது பயன்படுத்தலாம். விளக்குகள் கிழக்கு திசையை பார்த்தவாறு ஏற்ற வேண்டும்.
பூஜையறையில் காலை, மாலை இரு வேளைகளும் விளக்கு ஏற்ற வேண்டும். புதிய திரி போட்டுதான் விளக்கு ஏற்ற வேண்டும். சூரியன் உதயமாவதற்கு முன்பு பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். அது போல் மாலை வேளைகளிலும் 6 மணிக்கு விளக்கு ஏற்றினால் எல்லாவிதமான யோகங்களும் கிடைக்கும்.
விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் புகழ் அபிவிருத்தியாகும். வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் ஆகியவற்றை கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். எள் எண்ணெயில் தீபம் ஏற்றுவது எப்போதும் கடவுளுக்கு உகந்தது. இதன் மூலம் நவக்கிரகங்களையும் திருப்திப்படுத்தலாம். அது போல் ஏற்றிய திரிகளை தூக்கி எறியாமல் சேர்த்து வைத்து ஒரு நாள் உங்களுக்கோ உங்கள் குடும்பத்தினருக்கோ சுத்தி போடலாம்.












Click it and Unblock the Notifications