அமாவாசை தினத்தில் காக்கைக்கு சோறு வைப்பதால்! எமனும் சனியும் திருப்தியடைவார்களாமே!
சென்னை: அமாவாசை தினத்தில் காக்கைக்கு சோறு வைக்கும் பழக்கம் உண்டா? இதன் பலன் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளலாம். முன்னோர்கள் ஆசி வழங்குவார்கள் என நம்பப்படுகிறதே!
இதுகுறித்து ராஜா ஹனி என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அமாவாசை தினத்தில் காக்கைக்கு சோறு வைக்கும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது. இதில் பல நம்பிக்கைகளும், பலன்களும் இருப்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

முன்னோர்களின் ஆசி
நம் முன்னோர்கள் காக்கை வடிவில் வருவதாகவும், அவர்களுக்கு நாம் உணவு அளிப்பது அவர்களின் ஆசியை பெற்றுத் தரும் எனவும் நம்பப்படுகிறது. இதனால் முன்னோர்களின் ஆசியும் கிடைக்குமாம்.
முன்னோர்களுக்கு நாம் படைக்கும் உணவை முன்னோர்களின் வடிவில் காகங்கள்தான் உண்ணும் என்பது நம்பிக்கை. அதனால் காகங்களின் வடிவில் வரும் முன்னோர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவினை சமைத்து விரதம் இருந்து படையல் வைப்பதின் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் விலகிவிடுமாம்.
சனி பகவான்
சனி பகவானின் வாகனமாக காக்கை கருதப்படுகிறது. அமாவாசை தினத்தில் காக்கைக்கு உணவளிப்பது சனி பகவானின் திருப்தியை பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது.
அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திபடுத்தியதாகவும் ஜோதிடர்கள் கருதுகிறார்கள்.
பித்ருக்களின் ஆசி
பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவருமே ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்கள்.
பிற பலன்கள்
செய்வினை கோளாறுகள் நம்மை அண்டாது. பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். எந்த மாதிரியான அமாவாசைகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது ?
முன்னோர்கள் இறந்த தேதி
* ஆடி அமாவாசை
* தை அமாவாசை
* மகாளய அமாவாசை
எந்த நேரத்தில் வைக்க வேண்டும்?
அமாவாசை நாளில், ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு உகந்த நேரம் மதிய வேளை.
தர்ப்பணம் முடிந்ததும், முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபடவேண்டும். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகச் சொல்லப்படும் காகத்துக்கு உணவு தரவேண்டும்.
என்ன மாதிரியான உணவுகளை கொடுக்கலாம்?
* சாதம்
* எள்ளுசாதம்
* சர்க்கரைப் பொங்கல்
* வடை
* பாயாசம்
இப்படி அமாவாசை தினத்தில் காக்கைக்கு சோறு வைக்கும் பழக்கம் நம் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications