கையெழுத்து போடும் போது கீழே கோடு போடுறீங்களா? வாஸ்து உணர்த்துவது என்ன?
சென்னை: நாம் போடும் கையெழுத்துக்குக் கீழ் ஒரு கோடு போட்டால் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றல் கிடைக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரே ஒரு கையெழுத்து தலையெழுத்தையே மாற்றும் என்கிறார்கள். கையெழுத்து போடுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலை பின்பற்றுகிறார்கள்.
ஒரு சிலர் இனிஷிலை கையெழுத்தாக போடுவார்கள். ஒரு சிலரது கையெழுத்தை பார்த்தால் ஒரு கலை போல் அழகாக இருக்கும். பெரும்பாலானர் கையெழுத்தின் கீழ் தேதியையும் நேரத்தையும் போடுவார்கள். இது மிகவும் பாதுகாப்பானதும் கூட!

அந்த வகையில் சிலர் கையெழுத்தின் கீழ் கோடு வரைவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். கையொப்பத்தின் கீழ் இரு கோடுகள் கூட வரைகிறார்கள்.
அது போல் கையெழுத்தின் கீழ் கோடு வரையலாமா? அவ்வாறு வரைந்தால் எத்தனை கோடுகள் வரையலாம் என்பது குறித்து ஜோதிடர் கூறுவதை கேளுங்கள். அவர்கள் கூறுகையில், கையெழுத்துக்கு கீழ் கோடு வரைவது என்பது அந்த கோட்டின் அளவு, திசையை பொறுத்து அது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கையொப்பத்தின் கீழ் நீண்ட, நேர்க்கோட்டை வரைந்தால் அது உங்கள் நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் பலப்படுத்துகிறது. வாஸ்துவின்படி கோடு கையெழுத்தை விட பெரியதாகவும் வளைவு நெளிவு இல்லாமல் நேராக இருத்தல் வேண்டும்.
ஒரு வேளை கோடு உங்கள் கையொப்பத்தை விட சிறியதாகவோ அல்லது வளைவாகவோ இருந்தால் அது உங்கள் வாழ்க்கையில் குழப்பத்தையும் தடையையும் ஏற்படுத்திவிடும். பலர் கையொப்பத்திற்கு கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகளை போடுவார்கள். ஆனால் இது சரியல்ல. மங்களகரமானதும் இல்லை. அதிகமான கோடுகள் வரைவது மனக் குழப்பத்தை ஏற்படுத்தும்.

அந்த நேரத்தில் சிலரால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. வாழ்க்கையிலும் தடைகள் ஏற்படும். கையெழுத்தின் கீழ் கோடு வெட்டப்பட்டாலோ அல்லது ஒரு வளைவு இருந்தாலோ அது வாஸ்துவின்படி நல்லதாகக் கருதப்படவில்லை. இதன் அர்த்தம் ஒருவரது முன்னேற்றம் தடுக்கப்படலாம். எனவே கையெழுத்துக்கு பிறகு கோடு போடும் பழக்கம் இருந்தால் அந்த கோடு உங்கள் கையெழுத்தை விட பெரியதாக இருக்க வேண்டும்.
அது போல் கையெழுத்தை வைத்து ஒருவரின் குணநலன்கள், செயல்பாடுகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஜோதிடத்தில் கணிக்கப்படுகிறது. கையெழுத்தை நெருக்கமாக போடுவோர் வெள்ளை மனம் கொண்டவர்கள் சொல்லப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் மற்றவர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெறுவார்கள்.
மற்றவர்களை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். சுருக்கமாக சொன்னால் உளவு பார்க்கும் இயல்புடையவர்கள்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications