கையெழுத்து போடும் போது கீழே கோடு போடுறீங்களா? வாஸ்து உணர்த்துவது என்ன?
சென்னை: நாம் போடும் கையெழுத்துக்குக் கீழ் ஒரு கோடு போட்டால் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றல் கிடைக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரே ஒரு கையெழுத்து தலையெழுத்தையே மாற்றும் என்கிறார்கள். கையெழுத்து போடுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலை பின்பற்றுகிறார்கள்.
ஒரு சிலர் இனிஷிலை கையெழுத்தாக போடுவார்கள். ஒரு சிலரது கையெழுத்தை பார்த்தால் ஒரு கலை போல் அழகாக இருக்கும். பெரும்பாலானர் கையெழுத்தின் கீழ் தேதியையும் நேரத்தையும் போடுவார்கள். இது மிகவும் பாதுகாப்பானதும் கூட!

அந்த வகையில் சிலர் கையெழுத்தின் கீழ் கோடு வரைவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். கையொப்பத்தின் கீழ் இரு கோடுகள் கூட வரைகிறார்கள்.
அது போல் கையெழுத்தின் கீழ் கோடு வரையலாமா? அவ்வாறு வரைந்தால் எத்தனை கோடுகள் வரையலாம் என்பது குறித்து ஜோதிடர் கூறுவதை கேளுங்கள். அவர்கள் கூறுகையில், கையெழுத்துக்கு கீழ் கோடு வரைவது என்பது அந்த கோட்டின் அளவு, திசையை பொறுத்து அது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கையொப்பத்தின் கீழ் நீண்ட, நேர்க்கோட்டை வரைந்தால் அது உங்கள் நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் பலப்படுத்துகிறது. வாஸ்துவின்படி கோடு கையெழுத்தை விட பெரியதாகவும் வளைவு நெளிவு இல்லாமல் நேராக இருத்தல் வேண்டும்.
ஒரு வேளை கோடு உங்கள் கையொப்பத்தை விட சிறியதாகவோ அல்லது வளைவாகவோ இருந்தால் அது உங்கள் வாழ்க்கையில் குழப்பத்தையும் தடையையும் ஏற்படுத்திவிடும். பலர் கையொப்பத்திற்கு கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகளை போடுவார்கள். ஆனால் இது சரியல்ல. மங்களகரமானதும் இல்லை. அதிகமான கோடுகள் வரைவது மனக் குழப்பத்தை ஏற்படுத்தும்.

அந்த நேரத்தில் சிலரால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. வாழ்க்கையிலும் தடைகள் ஏற்படும். கையெழுத்தின் கீழ் கோடு வெட்டப்பட்டாலோ அல்லது ஒரு வளைவு இருந்தாலோ அது வாஸ்துவின்படி நல்லதாகக் கருதப்படவில்லை. இதன் அர்த்தம் ஒருவரது முன்னேற்றம் தடுக்கப்படலாம். எனவே கையெழுத்துக்கு பிறகு கோடு போடும் பழக்கம் இருந்தால் அந்த கோடு உங்கள் கையெழுத்தை விட பெரியதாக இருக்க வேண்டும்.
அது போல் கையெழுத்தை வைத்து ஒருவரின் குணநலன்கள், செயல்பாடுகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஜோதிடத்தில் கணிக்கப்படுகிறது. கையெழுத்தை நெருக்கமாக போடுவோர் வெள்ளை மனம் கொண்டவர்கள் சொல்லப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் மற்றவர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெறுவார்கள்.
மற்றவர்களை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். சுருக்கமாக சொன்னால் உளவு பார்க்கும் இயல்புடையவர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications