வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் எதிர்காலத்தை சரியாக கணிக்கிறதா?
சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இந்த பகுதியிலுள்ள ஜோதிடர்கள் படித்துச் சொல்லும் ஓலைச்சுவடி ஜோசியமும், நாடி ஜோசியமும் மக்கள் மத்தியில் வெகு பிரபலம். பலரும் நாடி ஜோதிடம் சொல்பவர்கள் மிகச் சரியாக தங்கள் பெயர், பெற்றோர், உடன் பிறந்தவர்கள், தொழில் என பலவற்றையும் புட்டு புட்டு வைப்பதாக சிலாகிக்கிறார்கள். சிலருக்கோ, அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியும் உள்ளது.
இதுகுறித்து சிவபெருமாள் பாலமுருகேசன் என்பவர் சமீபத்தில் குவாராவில் கூறிய பதில் ஒன்று வைரலானது. இதோ அவரது வார்த்தைகளில் இருந்து நீங்களே படியுங்கள்.

நான் பார்த்திருக்கிறேன். சென்னையிலேயே 1991-ல். வேண்டுமென்றே மதிய உணவு இடைவேளையில் சென்றேன். அரைமணி நேரத்துக்கு மேல் இருக்க முடியாது என்றேன். ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த கைரேகை பதிவை கொடுத்தேன். அவ்வளவுதான். பிறகு எல்லாமே அவர் படிக்க படிக்க ஆம், இல்லை என்ற பதில்கள். ஒருவழியாக ஓலை கிடைத்தது. வேகமாக படித்து அதை பதிவு செய்தும் கொடுத்தார். எனது பெயர் (அதே பெயரில் இதுவரை ஒரே ஒருவரை சந்தித்திருக்கிறேன்), எனது தந்தையார் பெயர் (அவர் பெயரில் இன்றுவரை வேறு எவரையும் சந்திக்கவில்லை), எனது தாயார் பெயர், எனது தாய்மாமனை வீட்டில் அழைக்கும் பெயர் (மிகச்சிலரே அறிந்த விஷயம்) இப்படி ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். பிறகு எதிர்காலம். இன்று பார்க்கையில் அனேகமாக 90 சதவிகிதம் சரியாகவே இருக்கிறது.
எனக்கு நடக்கப்போகும் மிக ஆபத்தான அறுவை சிகிச்சை பற்றி கூட கூறியிருக்கிறார் - எந்த வயதில் என்பது உட்பட. எனவே நம்புகிறேன். ஆனால் நாடி சோதிடர்கள் மத்தியில் பல ஏமாற்றுக்காரர்களும் இருக்கிறார்கள் என்பது உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். அதேநேரம், பலரும் இவரது பதிவுக்கு பின்னூட்டமிட்டிருந்தனர்.
அதில் ராஜாராம் என்பவர் கூறுகையில், 1980 என நினைக்கிறேன். நண்பர் ஒருவருக்கு சுவடி ஜோசியம் பார்க்க சென்றோம். அவர்கள் படித்ததில் 99 சதவிகிதம் சரியாக இருந்தது. ஆனால் அது எப்படி என தெரியவில்லை என்று ஆச்சரியம் வெளிப்படுத்தியுள்ளார். மூர்த்தி பெரியசாமி என்பவர் கருத்து வேறுமாதிரி உள்ளது.
இதுபற்றி அவர் கூறுகையில், வயதும் அனுபவமும் உள்ளவர்கள் மட்டுமே உண்மையாக கூறுகின்றனர். புதிதாக உருவாக்கப்பட்ட இடங்களில் எல்லாம் நம்மிடம் பேசி அதன் பின்னர் பதில் கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் சிலர் சரியாக பார்த்து சொல்லும் ஜோதிடர்களின் தொலைபேசி எண்களை பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். உங்களுக்கு இப்படியான அனுபவம் உள்ளதா, நீங்களும், நமது, கமெண்ட்டில் பதிவு செய்யலாமே.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications