இந்த 4 பொருளை யாருக்கும் பரிசாக தராதீங்க.. இந்த 4 பொருளையும் பரிசா கொடுங்கள்.. சூப்பர் வாஸ்து டிப்ஸ்
சென்னை: வாஸ்து சாஸ்திரத்தின் படி சில பொருட்களை பரிசாகவோ, தானமாகவோ கொடுக்கக்கூடாது என்பார்கள்.. அதேபோல சில பொருட்களை பிறருக்கு தருவதால், அவர்களது வாழ்வு சுபீட்சம் பெறும் என்றும் சொல்வார்கள். அது என்னென்ன பொருட்கள் தெரியும்?
விநாயகர் சிலையை தாராளமாக பிறருக்கு பரிசாக தரலாம்.. வீடுகளிலும் வைத்திருக்கலாம.. தடைகளை விலக்கக்கூடிய கடவுள் என்பால், மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது... யாருக்காவது பரிசாக தரவேண்டுமானால், விநாயகர் சிலை சிறந்த பொருளாகும்.

சிறந்த பரிசு பொருள்: சிரிக்கும் புத்தர் சிலைகள் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் குறிப்பவை.. எனவே பரிசாக கொடுக்கலாம்.. வீடுகளிலும் இந்த சிலையை வைப்பதால், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகி காணப்படும்..
உயிரினங்களிலேயே ஆமைகள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழக்கூடியவை.. அதனால், ஆமைகளை வீடுகளிலும் கடைகளிலும் வாங்கி வைப்பதால் ஆயுள் கூடும் என்றும், செல்வ வளம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது. எனவே, ஆமை உருவங்களை வீடுகளிலும் கடைகளிலும் வைக்கலாம். இதனை பரிசாகவும் பிறருக்கு தரலாம்.
நல்ல அதிர்வுகள்: நீர் ஊற்று பொங்கி வருவதை போன்ற பொருட்களும், வீட்டில் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியவை.. எனவே தொழில் செய்யும் இடங்களில், அல்லது வீட்டில் பீரோ பக்கத்தில் நீர் ஊற்று போன்ற செட்டிங் செய்யப்பட்ட பொருட்களை வைக்கலாம்... அதிலும் இந்த பொருளில் நீர் ஓடிக் கொண்டேயிருந்தால், இன்னும் நல்லது..
அதேபோல சில பொருட்களை பரிசாகவோ அல்லது தானமாகவோ வழங்கக்கூடாது.. வீட்டில் செய்யப்படும் ஊறுகாய்களை பரிசாக பிறகு கொடுக்கக்கூடாது.. இதனால், உங்கள் உறவில் மனகசப்பு, பிளவு ஏற்படுமாம்.. ஒருவேளை, ஊறுகாய்களை வாங்கவேண்டிய கட்டாயம் வந்தால், பதிலுக்கு சாக்லேட்டை பரிசாக பெற்றுக் கொள்ளலாம்.
முட்செடிகள்: அதேபோல,குளிர்ச்சியான, பசுமையான தாவர வகைகளை பரிசாக கொடுப்பது நன்மை தரும்.. ஆனால் எக்காரணம் கொண்டும், வறண்ட செடிகளை அதாவது கற்றாழை அல்லது முட்செடிகளை பரிசாக தரக்கூடாது.. இதனால், புதிய முயற்சிகளிலும் தடைகள் உண்டாகிவிடுமாம். கண்ணாடிகளையும் பிறருக்கு பரிசாக தரக்கூடாது.. கத்தி அல்லது கத்திரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களையும் பரிசாக அளிக்க கூடாது.. இதனால் கொடுப்பவர் பெறுபவர் என 2 தரப்பினருக்குமே கெடுதல் வந்துவிடும் என்கிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications