இந்த பறவை உங்க வீட்டில் கூடு கட்டுதா? அப்ப பணம், மகிழ்ச்சி தங்கும்.. பறவைகள் போட்டோவை இப்படி வைங்க
சென்னை: பறவை வளர்ப்பதை பலரும் விரும்புகிறார்கள்.. குறிப்பிட்ட பறவைகளை வீடுகளில் வளர்த்து வருவதை காண்கிறோம்.. எனினும், வீடுகளில் பறவைகள் வீட்டில் கூடு கட்டினால் நல்லதா? எந்த பறவைகள் வீடுகளில் கூடு கட்டினால் நல்லது? என்றுகூட ஆன்மீகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
பறவைகள் என்பது, நம்முடைய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவே அமைந்துள்ளது.. முருகனின் வாகனமாக கருதப்படுவதால், வீட்டுக்குள் மயில் வருவது அபூர்வமாகவும், நன்மைக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது. மயில்கள் வீடுகளுக்குள் வராத பட்சத்தில், மயிலிறகு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

பறவைகள்: Love Birdsகளை வளர்ப்பதாக இருந்தால், அதனுடைய கூடு வடகிழக்கு திசையை நோக்கி இருக்கும்படியும், காற்றோட்டமான சூழல் இருக்கும்படியும் பார்த்து கொள்ளலாம்.
வீடுகளில் சில பறவைகள் கூடு கட்டினால் மிகவும் நல்லது.. ஏனென்றால், உயிரினங்களுக்கு தெய்வ சக்தியை அறியும் ஆற்றல் உள்ளது. எனவே, புறா, குருவி, அணில் போன்றவை கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது என்பார்கள்.. சிலசமயம், இந்த பறவைகளின் கூட்டை கலைப்பது வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையலாம். அதேபோல வீட்டிற்குள் பறவை வந்தாலும் விரட்டக்கூடாது.
புறாவை எடுத்துக் கொண்டால், மங்களம் மற்றும் அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது. வீட்டில் ஒரு புறா கூடு இருப்பது மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்க செய்யும் என்பது நம்பிக்கையாக உள்ளது..
புறா கூடுகள்: எனினும், புறாவின் வீடு அழுக்காக இருந்தால், அது ஒரு அசுப அறிகுறியை தரக்கூடியதாம்.. புறாக்கள் வலுக்கட்டாயமாக வந்து கூடு கட்ட நினைத்தாலும், அது குடும்பத்திற்கு நல்லதில்லை என்கிறார்கள். அதேபோல, வீட்டின் ஜன்னல் அல்லது பால்கனியில் புறா கூடு இருந்தால், அது துரதிர்ஷ்டம் என்கிறார்கள். வீட்டில் தேன் கூடு இருப்பதும் நல்லதல்ல என்கிறது சாஸ்திரம்.. இதனால், வீட்டில் கஷ்டம் சேர்ந்துவிடுமாம்..
அடுத்ததாக சிட்டுக்குருவிகளை சொல்லலாம்... தெய்வ நம்பிக்கையை அதிகப்படுத்தும் சிட்டுக்குருவி, வீட்டில் கூடு கட்டினால் அதை எக்காரணம் கொண்டும் கலைக்காமல் இருந்தாலே போதும்.. புதிதாக திருமணமான தம்பதியர் வீட்டில், சிட்டுக்குருவி கூடு கட்டினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.. ஒருவேளை கூடுகட்டாமல் அடிக்கடி சிட்டுக்குருவி வீட்டுக்குள் வருவதாக இருந்தால், சிறிது தண்ணீரும், வைக்கோலும் வைத்தாலே போதும்.
சிட்டுக்குருவிகள்: சிட்டுக்குருவிகளின் படங்களைகூட வீட்டில் வைப்பதும் நல்ல பலன்களை தரக்கூடியதே.. இதனால், வாஸ்து தோஷங்கள் எளிதாக நீங்குவதுடன், எதிர்மறையையும் வீட்டிலிருந்து அகற்றுகிறது. இந்த சிட்டுக்குருவி போட்டோக்களை வீட்டின் கிழக்கு திசையில் வைக்கலாம்.
சிட்டுக்குருவி என்றில்லை.. பொதுவாக, பறவைகளின் போட்டோக்களை வீடுகளில் வைப்பதுகூட, குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சூழலை உருவாக்கும் என்கிறார்கள்.. அந்தவகையில், வாத்துகள், கிளிகள், மயில்கள் போன்ற ஒரு ஜோடி பறவைகளின் உருவத்தை அல்லது படத்தை வீட்டில் வைக்கலாம்..
அமைதி மகிழ்ச்சி: அதுமட்டுமல்ல, ஜோடி பறவைகளின் போட்டோக்களை புதிதாக மணமான தம்பதிகளின் படுக்கையறையில் வைத்திருப்பதால் இணக்கம் கூடும் என்பது நம்பிக்கையாகும்.. வீட்டில் அன்பும் அமைதியும் குறைவில்லாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது .
அதேசமயம், கரையான் கூடு, குளவி கூடு போன்ற பூச்சிகள் கட்டும் கூடுகள், வீடுகளில் இருப்பது மிகவும் ஆபத்தானவை என்கிறார்கள்.. அதிலும், கரையான் கூடுகள் இருந்தால், அந்த குடும்பத்தில் வீண் விரயங்களும், நிம்மதியின்மையும் சேர்ந்துவிடும்.. அதனால், கரையான்கூடு இருந்தால மட்டும் அதனை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.. பிறகு அந்த இடத்தில், சிறிது சிமெண்ட் வைத்து பூசி விட்டால் போதும்.. இதனால், அங்கு மீண்டும் மீண்டும் கரையான் படையெடுத்து வராமல் தடுக்கப்பட்டுவிடும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications