Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

11 நாட்கள் ஒளி வடிவில் அண்ணாமலையார்! திருக்கார்த்திகை தீபத்திற்கு அவல் பொரி படைப்பது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திகை தீபத்தன்று அவல் பொரி ஏன் படைக்கப்படுகிறது தெரியுமா?

திரு கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி நம் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிப்படுவது வழக்கம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.

Do you know Why Aval pori urundai is doing for Neivediyam?

தான் என்ற அகந்தையுடன் இருப்பவர்களால் இறைவனை அடைய முடியாது. இறைவன் ஜோதி வடிவானவன். அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதை உலகிற்கு சிவபெருமான் உணர்த்திய தினம்தான் கார்த்திகை தீபத்திருவிழா ஆகும்.

அடி முடி காணா சிவனே என்ற சொல்லுக்கு வலுசேர்க்கும் விதமாக, சிவனின் அடி, முடியை காண புறப்பட்டு, தோற்றுப் போன பிரம்மனுக்கும், விஷ்ணுவிற்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் சிவ பெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்த தினத்தை தான் நாம் திருக்கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடுகிறோம்.

இந்த தீபத்தின் போது குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். அதிகபட்சமாக 50, 100 என எத்தனை விளக்குகள் ஏற்றலாம். பூஜை அறை, படுக்கை அறை, சமையல் அறை, படுக்கை அறை, கூடம் என அனைத்து இடங்களிலும் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ ஏற்றலாம்.

இந்த நிலையில் திருக்கார்த்திகை தீபத்திற்கு அவல் பொரி படைப்பது வழக்கம். வெல்லம் பாகு எடுத்து அதில் அவல், வேர்க்கடலை. பொட்டுக் கடலை, முந்திரி, திராட்சை என்பதை எல்லாம் போட்டு கலந்து உருண்டை பிடித்து நெய்வேத்தியம் செய்து வழிபட வேண்டும். இது ஏன் என்றால் சிவப்பெருமான் என்றால் எளியோருக்கெல்லாம் எளியோர் என்பதால் எளிதாக கிடைக்கும் அவலை படைப்பது வழக்கம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+