Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முன்னோர்களின் சொத்துகள் உங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா? ஜாதகத்தை எடுங்க 5ஆவது இடத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னோர்களின் சொத்துகள் உங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம். அது போல் குலதெய்வம் அருள் இருக்கிறதா என்பதையும் பார்க்கலாம்.

இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: நமது ஜாதகத்தில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். இந்த ஸ்தானம் தான் நம் முன் ஜென்மத்தினை பற்றி உணர்த்துகிறது. நம் முன்னோர்கள் மற்றும் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப இந்த பிறப்பு அமைகிறது.

spirtuality astrology

ஒரு ஜாதகத்தில் 5ஆம் அதிபதியும், 5ஆம் இடமும் சுபர் பார்வை, சேர்க்கையில் சுப நிலையில் அமையப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். 5ஆம் இடம், அதிர்ஷ்டம்,உழைக்காமல் வரும் பணம், முன்னோர்கள் சொத்து, பூர்வீக இடம், குழந்தை செல்வம்,ஆழ் மனம் .5 வலுப்பெறும்போது இவை அனைத்தும் நல்ல நிலையில் அமைந்து விடுகிறது.

நம் குல தெய்வத்தின் நிலையும் இங்கே தெரியும். இவர்களுக்கு குல தெய்வ அருளும் நன்றாக அமைந்து விடுகிறது. ஒரு ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு அனைத்து பாவகமும் பாதிக்கப்பட்டிருந்தாலும் 5ஆம் இடம் வலுப்பெற்றுவிட்டால் ஏதோ ஒரு வாய்ப்புகள் கிடைத்து வாழ்ந்துவிடுகிறார்கள். முன்னோர்கள் சொத்துகள் மற்றும் ஜாதகருக்காக வீட்டில் ஒருவர் உழைத்து தருகிறார்.

இங்கு பாவகிரகங்களான சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது, போன்றவை இருந்து 5-ஆம் அதிபதியும் பாதிக்கப்படும்போது தான் இங்கு தோஷமாக செயல்படுகிறது. அதிலும் இரண்டு, மூன்று பாவகிரகங்கள் ஒரே நேரத்தில் 5-ஆம் இடத்திற்கு தொடர்பு கொள்ளும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 5-ஆம் இடம் ஆழ்மனதை குறிக்கும். இது போன்ற அமைப்பு உடையவர்களுக்கு மன அமைதி இருக்காது. எப்போதும் மன உளைச்சலில் இருப்பார்கள்.

கோபத்திலும், ஆத்திரத்திலும் கடுமையாக நடந்து கொள்வார்கள். திடீரென்று சாந்தமாக நடந்துக் கொள்வார்கள். இது போன்ற முரண்பாடுகள் உடையவர்களாக இருப்பார்கள். காதல், மது பழக்கம் போன்று ஏதேனும் ஒன்றுக்கு எளிதில் அடிமையாகுவார்கள். மற்றவர்கள் பாசம் காட்டி இவர்களை ஏமாற்றுவார்கள்.

யாராவது ஒருவர் மீது தீவிர அன்பு செலுத்திவிட்டு அவர்கள் பாசத்திற்காக ஏங்குவார்கள். முன்னோர்கள் சொத்துகள் கிடைக்காமல் போவதும், பூர்வீகத்தை விட்டு வெளியேறுவதும் இதனால் தான். இந்த அமைப்பு உடையவர்களுக்கு குலதெய்வம் இருப்பிடம் தெரிவதில்லை. அப்படி தெரிந்து வழிபாடு செய்தாலும் மனதிருப்தி கிடைப்பதில்லை.

இந்த அமைப்புகள் புத்திர தோஷத்தையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்று 5ஆம் இடம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட ஜாதகங்களில் எத்தனை யோக கிரக சேர்க்கைகள் இருந்தாலும் பெரிய அளவில் வேலை செய்வதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+