முன்னோர்களின் சொத்துகள் உங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா? ஜாதகத்தை எடுங்க 5ஆவது இடத்தை பாருங்க
சென்னை: முன்னோர்களின் சொத்துகள் உங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம். அது போல் குலதெய்வம் அருள் இருக்கிறதா என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: நமது ஜாதகத்தில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். இந்த ஸ்தானம் தான் நம் முன் ஜென்மத்தினை பற்றி உணர்த்துகிறது. நம் முன்னோர்கள் மற்றும் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப இந்த பிறப்பு அமைகிறது.

ஒரு ஜாதகத்தில் 5ஆம் அதிபதியும், 5ஆம் இடமும் சுபர் பார்வை, சேர்க்கையில் சுப நிலையில் அமையப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். 5ஆம் இடம், அதிர்ஷ்டம்,உழைக்காமல் வரும் பணம், முன்னோர்கள் சொத்து, பூர்வீக இடம், குழந்தை செல்வம்,ஆழ் மனம் .5 வலுப்பெறும்போது இவை அனைத்தும் நல்ல நிலையில் அமைந்து விடுகிறது.
நம் குல தெய்வத்தின் நிலையும் இங்கே தெரியும். இவர்களுக்கு குல தெய்வ அருளும் நன்றாக அமைந்து விடுகிறது. ஒரு ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு அனைத்து பாவகமும் பாதிக்கப்பட்டிருந்தாலும் 5ஆம் இடம் வலுப்பெற்றுவிட்டால் ஏதோ ஒரு வாய்ப்புகள் கிடைத்து வாழ்ந்துவிடுகிறார்கள். முன்னோர்கள் சொத்துகள் மற்றும் ஜாதகருக்காக வீட்டில் ஒருவர் உழைத்து தருகிறார்.
இங்கு பாவகிரகங்களான சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது, போன்றவை இருந்து 5-ஆம் அதிபதியும் பாதிக்கப்படும்போது தான் இங்கு தோஷமாக செயல்படுகிறது. அதிலும் இரண்டு, மூன்று பாவகிரகங்கள் ஒரே நேரத்தில் 5-ஆம் இடத்திற்கு தொடர்பு கொள்ளும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 5-ஆம் இடம் ஆழ்மனதை குறிக்கும். இது போன்ற அமைப்பு உடையவர்களுக்கு மன அமைதி இருக்காது. எப்போதும் மன உளைச்சலில் இருப்பார்கள்.
கோபத்திலும், ஆத்திரத்திலும் கடுமையாக நடந்து கொள்வார்கள். திடீரென்று சாந்தமாக நடந்துக் கொள்வார்கள். இது போன்ற முரண்பாடுகள் உடையவர்களாக இருப்பார்கள். காதல், மது பழக்கம் போன்று ஏதேனும் ஒன்றுக்கு எளிதில் அடிமையாகுவார்கள். மற்றவர்கள் பாசம் காட்டி இவர்களை ஏமாற்றுவார்கள்.
யாராவது ஒருவர் மீது தீவிர அன்பு செலுத்திவிட்டு அவர்கள் பாசத்திற்காக ஏங்குவார்கள். முன்னோர்கள் சொத்துகள் கிடைக்காமல் போவதும், பூர்வீகத்தை விட்டு வெளியேறுவதும் இதனால் தான். இந்த அமைப்பு உடையவர்களுக்கு குலதெய்வம் இருப்பிடம் தெரிவதில்லை. அப்படி தெரிந்து வழிபாடு செய்தாலும் மனதிருப்தி கிடைப்பதில்லை.
இந்த அமைப்புகள் புத்திர தோஷத்தையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்று 5ஆம் இடம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட ஜாதகங்களில் எத்தனை யோக கிரக சேர்க்கைகள் இருந்தாலும் பெரிய அளவில் வேலை செய்வதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications