Hanuman Jayanthi: எந்தெந்த ராசிக்காரர்கள் அனுமன் சாலிசா பாராயணம் செய்ய வேண்டும்?
சென்னை: பவுர்ணமி நன்னாளில் அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படும் நிலையில் எந்தெந்த ராசிக்காரர்கள் அனுமன் அருளை பெற அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஹனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்த நாளை கொண்டாடும் நாள் இது. வலிமை, பக்தி, ஞானம் உள்ளிட்டவைகளுக்கு சொந்தக்காரர் ஹனுமன்.

அனுமனின் அருளை பெற அனுமன் சாலிசாவை பல பக்தர்கள் சொல்லி வருகிறார்கள். அது போல் அனுமனை போல உடல் வலிமை, ஞானம், அறிவு ஆகியவற்றை பெறவும் இது உதவுகிறது.
அந்த வகையில் அனுமன் அருளை பெற எந்தெந்த ராசிக்காரர்கள் அனுமன் சாலிசா சொல்ல வேண்டும் என்பதை பார்க்கலாம். ஜோதிடர்களும் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இந்த அனுமன் சாலிசாவை சொல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
அந்த வகையில் மேஷம், விருச்சிகம், சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அனுமன் சாலிசாவை ஜெபிக்க வேண்டும்.
மேஷம்- செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்டது மேஷ ராசி. அனுமன் சாலிசாவை இந்த ராசிக்காரர்கள் சொல்வதன் மூலம் அவருக்கு மன அமைதி கிடைக்கும். புத்தி கூர்மையும் கிடைக்கும். மன சஞ்சலம் குறையும்.
விருச்சிகம்- இந்த ராசிக்கும் செவ்வாய்தான் அதிபதி. இவர்கள் எல்லாவற்றிற்கும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். அனுமன் சாலிசாவை சொல்வதன் மூலம் மன அமைதியும் தெளிவும் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களில் இருந்து பாதுகாக்கும்.
சிம்மம்- சூரியனின் ஆதிக்கத்தை கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்கள் அச்சமின்மையும் பெருமையையும் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் அனுமன் சாலிசா சொல்வதன் மூலம் ஈகோ தொடர்பான போராட்டங்களில் இருந்து விடுபடுவார்கள். தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள உதவும்.
கடகம்- செவ்வாயை ராசி அதிபதியாக கொண்டவர்கள். உணர்ச்சிவசப்படுவீர்கள். அனுமன் சாலிசா சொல்வதன் மூலம் உங்களது ஆன்மீக தொடர்பை வலுப்படுத்தும், பாதுகாப்பான சூழல் மற்றும் அமைதியை கொடுக்கும்.
தனுசு, மீனம்- இரு கிரகங்களுமே குருவின் ஆதிக்கத்தை பெற்றவை. உண்மை மற்றும் தார்மீக தெளிவை தேடலுடன் தொடர்புடையவர்கள். இவர்கள் அனுமன் சாலிசா சொன்னால் அது பாதுகாப்பு அரணாக இருக்கும் என்கிறார்கள்.
அனுமன் சாலிசா துளசிதாஸ் என்பவரால் எழுதப்பட்டது. இதில் மொத்தம் 40 பத்திகள் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் அனுமன் சாலிசாவை சொன்னால் அனுமனின் ஆசிகளை அதிகமாக பெறுவார்கள். அது மட்டுமல்லாமல் இதை சொன்னால் அச்சம் போகும், எதிர்மறை எண்ணம் விலகும், உள்ளுணர்வை வலுப்படுத்தும். ஆன்மீகத்தையும் வளர்க்கும் என்கிறார்கள்.
இன்று அனுமன் ஜெயந்தி நாளன்று சிவப்பு அல்லது காவி நிறத்தினாலான உடைகளை அணிய வேண்டும். செந்தூரம், வாழைப்பழம், பூக்கள், வெல்லம் வைத்து படைக்க வேண்டும். நெய் விளக்கு ஏற்றி ஊதுபத்தி ஏற்ற வேண்டும். அனுமன் சாலிசாவை 11 முறை அல்லது 108 முறை ஜெபித்தால் அதீத பலன்களை பெறலாம்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications