மருதாணி விதைகள்.. சாம்பிராணியுடன் நாலு மருதாணியின் விதையை பொடித்து போடுங்க.. கூடும் பணம், மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடு முழுவதும் வாரம் ஒரு முறையாவது தூபம் போட்டு வந்தால், வீட்டிலுள்ள திருஷ்டிகள், எதிர்மறை ஆற்றல்கள் விலகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்தவகையில், மருதாணி செடியின் விதைகளில் எப்படி தூபம் போட வேண்டும் தெரியுமா? இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

பெரும்பாலும் வீடுகளில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் சாம்பிராணி போடுவார்கள். இதனால், தேவையற்றவை விலகி தேவையானவை வீடு தேடி வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

spirituality henna seeds henna seed sambirani


சாம்பிராணி : சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.. சிலர் சாம்பிராணியில் அகில் போட்டு தூபம் போடுவார்கள். இதனால், குழந்தைபேறு உண்டாகும். அதேபோல, சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட்டால் வீட்டில் தெய்வம் நிலைக்கும். சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட்டால், வீடெல்லாம் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்..


சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட்டால் சகல தோஷங்களும் விலகிவிடும். சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டால், காரியசித்தி உண்டாகும். சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட்டால் சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பவுடரை போட்டு தூபமிட்டால், பெரியோர்களின் மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

மருதாணி இலை: அந்தவகையில், சாம்பிராணியில் மருதாணி இலை பொடியையும் பயன்படுத்தலாம்.. எப்படி தெரியுமா? மருதாணி விதைகளை வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் வைத்து கொண்டு, வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி போடும் போது, அதில் இந்த மருதாணி விதைகளையும் நாலு பொடித்து தூபம் போடுவதால், சூனிய கோளாறுகள் மொத்தமும் விலகும்.. உங்களை இத்தனை காலமும் வாட்டிக்கொண்டிருந்த துரதிர்ஷ்டங்களும் விலகும்.. கட்டுக்கடங்காத செலவுகளும் இனி கட்டுக்குள் வரக்கூடும்..

சிலர் வாரம் 2 முறை என இல்லாமல் தினம்தோறும் வீட்டில் சாம்பிராணி போடுவார்கள்.. அப்படி போடுபவராக இருந்தாலும், மருதாணி காய்களை பயன்படுத்தலாம்.. காரணம், தாந்திரீக வித்தைகளில் இந்த மருதாணி விதைகளைதான் நிறைய பயன்படுத்துகிறார்களாம்... இப்படி மருதாணி விதைகளுடன் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும்போது, அந்த வாசத்திற்கு வீட்டில் கண்ணுக்கு தெரியாத எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கி விடும்.. அத்துடன், வீட்டில் விஷ ஜந்துக்கள், பூச்சிகள் இருந்தாலும் வெளியேறிவிடும்.

தொழில் விருத்தி: வீடுகளில் மருதாணி விதையை போட்டு தூபம் ஏற்றுவதை விட, வியாபாரம் செய்யும் இடங்கள், தொழில் ஸ்தாபனங்கள், தொழில் கூடங்களிலும் மருதாணி விதையில் தூபம் போடுவதால், மிகப்பெரிய முன்னேற்றமும், வளர்ச்சியும் காணப்படும். காரணம், மருதாணி விதைகளில் மகாலட்சுமி நிறைந்திருப்பதால், தொழில் வளர்ச்சியடையும்.. மருதாணி விதையை பொடித்து போடும்போது, வெண்கடுகம் சேர்த்து தூபம் போட்டால், இன்னும் நல்லது.. பொருளாதார முன்னேற்றம் அடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+