திருப்பதி போகணும்னு பிளான் செய்தாலும் முடியலையா? அப்போ சனிக்கிழமைகளில் இதை செய்ங்க!
திருப்பதி: திருப்பதிக்கு போகணும்னு நினைக்கிறீர்கள், ஆனால் போக முடியவில்லையா, அதற்கு நீங்கள் சனிக்கிழமையில் ஒன்றை செய்தால், நிச்சயம் வெங்கடாஜலபதியை கண் குளிர பார்த்து அவரது ஆசியை பெறலாம்.
திருப்பதிக்கு செல்வது என்றாலே அலாதி பிரியம்தான். திருப்பதிக்கு செல்ல டிக்கெட் புக் செய்துவிட்டாலே அந்த நாளை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். என்னதான் ஆன்லைனில் புக் செய்ய காத்திருந்தாலும் பெருமாள் அழைத்தால்தான் நாம் அவரை பார்க்க செல்ல முடியும்.

டிக்கெட் புக் ஆகிவிட்டு பிறகு ரத்தான கதையெல்லாம் நடந்திருக்கு. எனவேதான் பெருமாள் நம்மை அழைத்தால் மட்டுமே அந்த புண்ணிய தலத்தை நாம் மிதிக்க முடியும்.
இப்படி திருப்பதி செல்ல நினைத்தும் போக முடியாமல் இருப்பவர்கள் சில எளிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் பெருமாளின் அருளை பெற முடியும். எந்த ஒரு கோவிலுக்கும் நாம் நினைத்த நேரத்தில் சென்றுவிட முடியாது. அதற்கு நமக்கு தரிசனம் தர வேண்டும் என அந்த தெய்வமும் நினைக்க வேண்டும் என்பார்கள்.
இதற்கு நமது குலத்தெய்வத்தின் அருள் வேண்டும் என்பது முக்கியம்தான். எனினும் திருப்பதி ஏழுமலையானை மட்டும் நினைத்த மாத்திரத்தில் எளிதாக தரிசித்துவிட முடியாது. திருப்பதி செல்ல வேண்டும் என நினைத்தாலே பல்வேறு தடைகள் எழத்தான் செய்யும். திருப்பதிக்கு சென்றாலும் ஏழுமலையானை தரிசிக்காமல் வருவோர் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
எனவே பெருமாளின் கடைக் கண் பார்வை நம் மீது பட வேண்டும். இப்படி திருப்பதி செல்ல தடை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சிலர் பிறந்த போதிலிருந்தே திருப்பதி சென்றதில்லை என்பார்கள். இதெல்லாம் நம் கர்மவினை என்றாலும் அதை நிவர்த்தி செய்யலாம். கருணை கொண்டவர்தான் ஏழுமலையான். அவரை தன் மனதில் நினைத்து வேண்ட வேண்டும்.
சோதனைகளை கொடுத்து வாழ்க்கை பாடங்களை கற்று கொடுப்பாரே தவிர பெருமாள் தன் பக்தனை எப்போதும் கைவிட மாட்டார். அவரது அருளை பெற சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு பெருமாளி படத்திற்கு முன் நின்று
ஓம் நமோ வெங்கடேசாய
ஓம் நமோ கோவிந்தாய
ஓம் நமோ நாராயணாய
என 10 முறை சொல்லி துளசியை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த மந்திரங்களை 108 முறை சொல்லி வழிபடலாம். இந்த மந்திரங்களை சொல்லி வழிபட்டு வந்தால் விரைவிலேயே திருப்பதி பெருமாள் உங்களை திருப்பதிக்கு அழைப்பார்.












Click it and Unblock the Notifications