ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலா? இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்
திருச்சி: ஸ்ரீரங்கநாதர் கோவிலில் தரிசனத்திற்கு வந்த ஐயப்ப பக்தர்கள் மூலஸ்தானத்தின் முன்பாக சத்தம் போட்டதோடு பணியாளர்களை அடித்ததாக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை போட்டு சபரிமலை செல்லும் பக்தர்களும் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய வருகை தருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டமாக சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அப்பொழுது அவர்கள் மூலஸ்தானம் அருகே சென்று கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. மூலஸ்தானத்தின் முன்பிருந்து உடனடியாக நகராமல் நின்றதாகவும் தெரிகிறது.
உடனடியாக அங்கு பணியில் இருந்த கோவில் பணியாளர்கள் அவரை அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது இரு பிரிவினருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது கோவில் பணியாளர்களும், பக்தர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஐயப்ப பக்தர் ஒருவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.
இன்று காலை சுமார் ஏழு மணி அளவில் ஸ்ரீரங்கம் காயத்ரி மண்டபத்தில் பக்தர்கள் வரிசையில் ஆந்திராவைச் சேர்ந்த 34 நபர்கள் காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை மிகுந்த ஓசை உடன் அடித்துள்ளார்கள் உண்டியலையும் பிடித்து ஆட்டி உள்ளார்கள் இதனை தட்டி கேட்ட திருக்கோயில் பணியாளரை தலை முடியை… pic.twitter.com/VtcNG5fkpq
— கல்கி குமார் (@kalgikumaru) December 12, 2023
இதன் காரணமாக தாக்கப்பட்ட கோவில் காவலர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐயப்ப பக்தரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் துறையினர் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவித்துள்ளார். இதனிடையே ரங்கநாதர் கோவிலில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலத்தை 34 பக்தர்கள் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்ததுடன் கோவில் பணியாளரையும் தாக்கி உள்ளனர்.
மற்ற பக்தர்களையும் தரிசனம் செய்ய விடாமல் இடையூறு செய்தனர். இதை தட்டிக்கேட்ட பணியாளரை தலைமுடியை பிடித்து உண்டியலில் மோத செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின்












Click it and Unblock the Notifications