உங்கள் கனவில் சிவன் கோயிலோ சிவ லிங்கமோ வந்தால் என்ன பலன்? நன்மையா தீமையா?
சென்னை: உங்கள் கனவில் சிவன் கோயில் அல்லது சிவலிங்கம் வந்தால் நல்லதா கெட்டதா? சாஸ்திரம் சொல்வது என்ன? கனவில் கோயில், கடவுளை கண்டால் அதற்கு என்ன அர்த்தம்?
தூங்கும் போது வருவதல்ல கனவு, உங்களை தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு என கலாம் கூறியிருந்தார். இது ஒரு புறம் இருந்தாலும் நாம் காணும் கனவுகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன.

அந்த வகையில் கனவில் பாம்பு வந்தால் என்ன பலன், மாடு துரத்தினால் என்ன பலன், பாம்பு தீண்டினால் என்ன பலன், அழகான மலர்களை கண்டால் பலன் என்ன? இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன அர்த்தம், அல்லது உயிருடன் இருப்பவர்கள் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்பதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள நினைப்பதுதான்?
வாழ்க்கையில் நாம் எதையெல்லாம் செய்ய வேண்டும் என கனவு காண்பதை போல வாழ்க்கையில் நடக்க போகும் சில விஷயங்கள் நமக்கு கனவுகள் மூலம் அறிகுறியாக தென்படுகின்றன. கனவு என ஒதுக்கி வைத்துவிட முடியாது. அவை நம் வாழ்க்கையின் ஒரு பகுதி. சில நேரங்களில் தேவையில்லாமல் ஏராளமான கனவுகள் வரும்.
பல சமயங்களில் கனவுகள் வந்து தேவையற்ற விஷயங்களை கூறும் போது அது நமக்கு கவலையை அளிக்கும். கனவு அறிவியல் என்ற ஒன்று உண்டு. அதன் படி ஒவ்வொரு கனவுக்கும் ஓர் அர்த்தம் உண்டு என கூறப்படுகிறது. உங்கள் கனவில் சிவன் கோயில் வந்தால் அது சக்தியின் சின்னம். இந்த கனவு எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தாலும் உங்களை கடவுள் கைவிடமாட்டார் என்பதை குறிக்கும் சின்னம். நீங்கள் தடைகளை கடக்க முடியும். நீங்கள் தைரியமாக இருப்பீர்கள்.
பெரிய பிரச்சினைகளை கூட எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களுக்கு கிடைக்கும். சிவன் கோயிலை கனவில் காண்பது உங்கள் வாழ்வில் முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. நீங்கள் மிகவும் வருத்தமடைந்து அமைதியை தேடும் போது உங்களுக்கு அத்தகைய கனவுகள் வந்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு சிறந்த எதிர்காலத்தை நோக்கி செல்ல போகிறீர்கள் என்பதை குறிக்கும்.
கனவில் சிவலிங்கத்தை கண்டால் உங்கள் பிரச்சினைகள் நீங்கும். நீங்கள் சிக்கல்களால் சூழப்பட்டிருந்தால் எந்த வழியும் தெரியவில்லை என்றால் இந்த கனவு உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் பணப்பற்றாக்குறையால் சிரமப்படுகிறீர்கள் என்றால் உங்கள் கனவு உங்கள் நிதி நிலையில் மாற்றம் ஏற்படும். மொத்தமாக உங்கள் கனவில் சிவன் கோயிலையோ சிவ லிங்கத்தையோ பார்த்தால் உங்கள் வாழ்வில் ஏற்றம் என்று அர்த்தம்.












Click it and Unblock the Notifications