காமாட்சி அம்மன் விளக்கோ குத்துவிளக்கோ எந்தெந்த கிழமைகளில் தேய்க்கலாம்? விளக்கேற்றும் திசை எது?
சென்னை: விளக்கை தேய்த்து கழுவ உகந்த நாட்கள் எது எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அத்துடன் மற்ற நாட்களில் விளக்கை தேய்த்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதையும் பார்க்கலாம்.
வீடுகள், கோயில்களில் ஏற்றப்படும் விளக்கில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். இது போன்று விளக்கேற்றி வழிபடுதல் என்பது தீய சிந்தனைகளை தடுக்கிறது. அது போல் விளக்கின் அடிபாகத்தில் பிரம்மாவும் தண்டு பகுதியில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் ஊற்றும் இடங்களில் சிவன் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.

அப்படிப்பட்ட விளக்கை எப்போதும் தேய்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் பச்சை நிறத்தில் ஒரு கறை படிய விடவே கூடாது. அது போல் ஏற்றிய திரியை வைத்தே விளக்கை ஏற்றக் கூடாது, ஒவ்வொரு முறையும் புதிய திரியை ஏற்ற வேண்டும். குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில்தான் தேய்க்க வேண்டும்.
செவ்வாய், புதன்கிழமைகளில் விளக்கை தேய்த்தால் திங்கள் முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை அதில் குடியிருக்கும் தாட்சாயினி வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை விளக்கு தேய்ப்பதை தவிர்த்துவிட்டு வியாழக்கிழமையே தேய்த்து வைத்துவிட வேண்டும்.

அதற்கான மஞ்சள் குங்குமத்தை கூட அடுத்த நாளான வெள்ளிக்கிழமை வைத்துவிடலாம். விளக்கை எந்தெந்த திசைகளில் ஏற்றலாம் என தெரியுமா? ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திர தோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும். ஐந்து முகம் ஏற்றினால் சகல நன்மைகளும் கிடைக்கும்.
அது போல் மண்ணால் செய்யப்பட்ட விளக்கை ஏற்றினால் தரித்திரம் விலகும். வெள்ளி விளக்கு ஏற்றினால் திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்றினால் தேவதை வாசம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும். இரும்பாலான விளக்கு ஏற்றினால் சனிகிரக தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
அது போல் ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கை தேய்த்தாலும் அன்று அசைவ உணவு சமைத்திருந்தால் விளக்கை தேய்க்கக் கூடாது. அசைவம் சமைக்காத வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை விளக்கை தேய்த்தால் கண் சம்பந்தமான நோய்கள் தீரும். திங்கள்கிழமை விளக்கை தேய்த்தால் மனம் அமைதிபடும்.
வியாழக்கிழமைகளில் விளக்கை தேய்த்தால் குருபகவானின் அருள் கிடைத்து மனக்கவலைகள் தீரும். சனிக்கிழமைகளில் விளக்கை தேய்த்தால் வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications