குலுங்கியது குலசை.. மக்கள் வெள்ளத்தில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்! காணக் கண்கோடி வேண்டும்!
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 10ஆம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது. ட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முத்தாரம்மன் மகிஷாசூரனை வதம் செய்தார். இதனையடுத்து 11வது நாளான இன்று பக்தர்கள் விரதத்தை முடித்து காப்பு களைகின்றனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

ஞானமூர்த்தீஸ்வரர் உடனரை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என பக்தர்கள் நம்பி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் முத்தாரம்மன் ஆலயத்தில் புகழ்பெற்ற தசரா விழா 10 நாட்கள் கொண்டாடப்படும் கொண்டாடப்படுகிறது.
மைசூர் தசரா விழாவுக்கு பிறகு குலசேகரப்பட்டணம் தசரா விழா என்றால் அது உலகப் புகழ்பெற்றது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரதம் இருந்து காப்பு கட்டி தசரா விழாவில் பங்கேற்ற பக்தர்கள் நேர்த்திக் கடனாக அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை பெற்றனர். தொடர்ந்து காணிக்கையை அம்மனுக்கு செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த நிலையில் குலசை தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக சூரசம்காரம் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு நடைபெற்றது. மகிஷாசூரமர்த்தினி கோலம் கொண்டு கடற்கரையில் அமைந்திருந்த சிதம்பரேஸ்வரர் கோயில் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து அங்கு மகிஷாசுர வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் மகிஷனின் தலை, அடுத்து சிம்ம தலை, பின்னர் மகிஷாசுரனின் எருமைத் தலையினை கொய்து அம்மன் வெற்றி கொடியை நாட்டினார்.
தீமையை அழித்து நன்மையை அம்மன் நிலை நாட்டுவதை குறிக்கும் வகையில் நடைபெற்ற சம்காரத்திற்கு பிறகு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குலசையில் இருப்பது மனித தலையா? கடல் அலையா? என்பது போல எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமே இருந்தது.
தொடர்ந்து சூரசம்காரத்தை தரிசித்து விட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை பக்தர்கள் மனதார தரிசித்து புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து விழாவில் பதினோராவது நாளான இன்று பக்தர்கள் தங்கள் காப்புகளை அகற்றி விரதத்தை நிறைவு செய்ய உள்ளனர். விழாவையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் விழா இனிதாக நிறைவடைந்தது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications