வராரு வராரு அழகர் வராரு..வைகையில் இறங்கும் கள்ளழகர் எந்த நாளில் எங்கு இருப்பார்.. முழு விபரம்
மதுரை: இனி ஒரு வாரத்திற்கு மதுரை முழுக்க வராரு..வராரு..அழகர் வராரு என்ற பாடல் எங்கும் எதிரொலிக்கும். சாமி இப்ப எங்க இருக்கு என்ற கேள்வியை மக்கள் ஆங்காங்கே கேட்டுக்கொள்வார்கள். மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கள்ளழகர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா நிகழ்ச்சி விபரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

கள்ளழகர் நேற்றிரவு அழகர்மலையில் இருந்து புறப்பட்டு இன்று காலையில் மதுரைக்கு வந்திருக்கிறார்.
04.05.2022 அன்று மதுரை மூன்றுவாடியில் எதிர் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை வரை பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர் இரவு தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தங்குகிறார்.

05.05.2023. அன்று காலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். வைகை ஆற்றின் கரை வழியாக சென்று வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தங்குகிறார்.
06.05.2023. வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் அருள்மிகு கள்ளழகர் புறப்படுதல் பின்னர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் வைபவமும் இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறும்

07.05.2023. அதிகாலை மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சியளித்தலும், பிற்பகல் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுதலும் நடைபெறும்,
08.05.2023. அழகர் மலைக்கு பூப்பலாக்கில் திரும்புதல் வைபவம் நடைபெறும்.
09.05.2023 அன்று காலை 10.32 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அழகர் மலை சேருவார்.
10.05.2023. அழகர் கோவிலில் உற்சவ சாற்று முறை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications