மதுரை சித்திரை திருவிழா.. மக்களே ரெடியா.. என்னென்ன விஷேசம்.. உடனே மதுரைக்கு டிக்கெட் போடுங்க
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவார்.
மதுரைக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் மீனாட்சி அரசாளும் ஊர் என்பதால் அதன் பெருமையை உலகமே அறியும். பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம். சிவனும் பார்வதியும் அரசாளும் நகரத்தில் தினம் தினம் திருவிழாதான். சித்திரை முதல் பங்குனி வரைக்குமே மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் நகர்வலம் வந்து கொண்டுதான் இருப்பார்கள்.

ஆவணி மூலத்திருவிழாவின் போது சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் அரங்கேறும். மதுரையின் அரசாட்சி சிவபெருமானிடம் ஆவணி மாதத்தில் ஒப்படைக்கப்படும். ஆவணி முதல் சித்திரை வரை மதுரையை அரசாள்வார் சிவன். சித்திரையில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அதுமுதல் மதுரையில் மீனாட்சி ஆட்சிதான்.
இப்போது மதுரையில் மாசி திருவிழா முடிந்து பங்குனி உத்திர திருவிழா தொடங்க உள்ளது. அதற்கு அடுத்தபடியாக வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்க உள்ளது. கொடியேற்றப்பட்ட நாளில் இருந்து தினம் தினம் சாமி ஊர்வலம் வருவதைக் காண மக்கள் மதுரை வீதிகளில் ஒன்று கூடுவார்கள். மதுரை பெண்கள் மல்லிகை மணக்க மணக்க சாமி ஊர்வலத்தை காண வருவதை காண்பதே அழகுதான்.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு சொக்கநாதருடன் கல்யாணம். அம்மை அப்பனுக்கு திருக்கல்யாணம் என்றால் சும்மாவா? ஊரே விழாக்கோலம்தான். முப்பத்து முக்கோடி தேவர்களும் பூத கணங்களும் மதுரைக்கு புறப்பட்டு வந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்றார்கள். பார்வதி தேவி மீனாட்சியாக வந்து மதுரையில் பிறந்தது எப்படி? ஈசன் எப்படி மீனாட்சியை சந்தித்தார் ? திருக்கல்யாணம் நடந்தது எப்படி என்பதே சுவாரஸ்யம்தான்.
மன்னன் மலயத்துவச பாண்டியன் மற்றும் அவன் மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் பிள்ளை பேறு வேண்டி யாகம் செய்தனர். மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழந்தையாகத் தீயிலிருந்து தோன்றினாள். இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்று இறைவன் அருள்வாக்கு கேட்டது.
குழந்தைக்குத் தடாதகை எனப் பெயரிடப்பட்டு வளர்ந்தாள். மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை ஆட்சி பொறுப்பேற்று நான்கு திசைகளிலும் திக்விஐயம் செய்து வென்றாள். திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் போரிட்டாள். பின் சிவபெருமானைக் கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. இறைவனே தனது கணவன் என அறிந்து நாணம் கொண்டாள்.
மதுரைக்கு வந்த சிவபெருமான் சுந்தரேஸ்வரராக மாறி மீனாட்சியை திருமணம் புரிந்தார். இந்த புராண நிகழ்வுகள் அனைத்தும் தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம், தடாதகையாரின் திருமணப் படலம் ஆகிய திருவிளையாடல் புராணக் கதைகளில் கூறப்பட்டிருக்கின்றன.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாண விழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடன் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
மீனாட்சி அம்மனுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. 20 ஆம் திக் விஜயமும், ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெறும். மாசி வீதிகளில் ஏப்ரல் 22 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
அதே நேரத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவையும், ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவார் எனவும் கோவில் நிர்வாகத்தின் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுரை குலுங்க குலுங்க சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. கோடை காலம் வெயில் சுட்டெரிக்கும் என்றாலும் மீனாட்சி சுந்தரரேஸ்வரரை தரிசிக்கவும் வைகையில் இறங்கும் கள்ளழகரை காணவும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள். நீங்களும் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவைக் காண உடனே டிக்கெட் போடுங்க.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications