பூசாரியே இருந்தாலும் தப்பித் தவறி கூட இந்த நேரத்தில் சிவன் கோயிலுக்குள் சென்றுவிடாதீர்கள்!
சென்னை: சிவன் கோயில்களில் மட்டும் தப்பித்தவறி கூட இந்த நேரத்தில் சென்றுவிடாதீர்கள். பின்னர் சில ஆச்சரியங்களை சந்திக்க நேரிடும். அவற்றால் ஆபத்தும் நேரிடலாம்.
இதுகுறித்து av tamil story எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தெரியாமல் கூட இந்த நேரத்தில் மட்டும் சிவன் கோயிலுக்குள் சென்றுவிடாதீர்கள். ஒரு முறை சிவன் கோயிலின் பூசாரி இரவு கோயிலின் கதவை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அடுத்த நாள் விடியற்காலையில் சீக்கிரமாக வந்த அந்த பூசாரி எந்த சப்தமும் இல்லாமல் கோயிலை திறந்துள்ளார். அங்கு சிவலிங்கத்தின் அருகில் இருந்த பெரிய நாகம் பூசாரியின் கால்களை சுற்றிக் கொண்டது.
பூசாரி செய்வதறியாமல் பதற்றத்தில் சிவநாமத்தை கூறினார். பின்னர் அந்த நாகம் பூசாரியை விடுவித்தது. உடனே பூசாரி வேகமாக வெளியே போய் நின்ற நாகத்தை வணங்கினார். பின்னர் நாகம் சிவலிங்கத்தின் பின்னால் சென்றது.
மேலும் பூசாரி மனதை தைரியப்படுத்திக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார். ஆனால் அந்த நாகம் அங்கில்லை. அப்போதுதான் அந்த பூசாரி உணர்ந்தார்- நாகத்தின் வடிவில் இருந்தது சிவபெருமான்!
அதனால்தான் சிவன் கோயில்களின் கதவுகளை திறக்கும் போது சங்குகளை ஊதி மத்தளங்கள் வாசித்து, மந்திரங்களை கூறி 3 முறை கதவை தட்டிய பிறகுதான் கதவை திறப்பார்கள். ஏனென்றால் உள்ளே சிவபெருமான் எந்த ரூபத்திலும் இருப்பார்.
இறை வழிபாட்டில் சங்கு என்பது மிகவும் முக்கியமானதொன்று. இந்த சங்கொலியால் தீய சக்திகள் ஒழிந்து நல்ல சக்திகளும், நல்ல எனர்ஜியும் உருவாகும் என்பது ஐதீகம். இந்த சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அர்த்தம்.
சுவாமிக்கு வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்வது நல்லது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்தின் போது சிவன் அக்னியாக காட்சி தருகிறார். அப்போது அவரை குளிர்விக்க சங்காபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இது நடத்தினால் லட்சுமி கடாட்சம் என்கிறார்கள்.
கோயில்களில் மணி அடிப்பது போல் சங்கு ஊதுவதும் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். ஆனால் நாளடைவில் இறப்பிற்கு ஒப்பிட , "உனக்கு சங்கு ஊத போறேன், மாட்டுனே மவன சங்குதான்" போன்ற பேச்சு வழக்குகள் ஏற்படுகின்றன.
ஆனால் சங்கு ஊதுவதும் மணியடிப்பதும் நல்ல சகுனம்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இந்த சங்கு சிவன் கோயில்களில் மட்டுமல்ல, விஷ்ணுவுக்கு உகந்ததாகும்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications