Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவோணம் திருநாள் வந்தல்லோ.. சின்னத்திரை நட்சத்திரங்களின் வீடுகளை அலங்கரித்த அத்தப்பூ கோலங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. அஸ்தம் தொடங்கி திருவோணம் வரைக்கும் 10 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை இன்றைய தினம் மலையாள மொழி பேசும் மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திரை உலக பிரபலங்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் இன்றைய தினம் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

கேரள மக்களின் அறுவடைத்திருநாளாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தமிழ்நாட்டிலும் தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, சென்னை போன்ற தமிழக மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Onam Festival celebration news reader family with Onam sadhya

கோவை மாவட்டத்தில் வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இங்கும் கோவை மாநகர், ஊட்டி, குன்னூர் பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களை கட்டியது.

Onam Festival celebration news reader family with Onam sadhya

சென்னையில் வசிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் தங்களின் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, குத்து விளக்கேற்றி வைத்து புத்தாடைகள் உடுத்தி, சுவையான உணவுகளை சமைத்து விருந்தினர்களை அழைத்து ஓணம் சத்யா பரிமாறி மகிழ்ந்தனர். தங்களைக் காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகவே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று கேரளாவின் புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. சின்னத்திரை பிரபலமும் பிரபல செய்தி வாசிப்பாளருமான ரஞ்சித் தனது குடும்பத்தினருடன் ஓணம் திருவிழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அத்தப்பூ கோலமிட்டு வீடுகளை அலங்கரித்து மகாபலி மன்னனை வரவேற்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+