Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி ஏழுமலையானுக்கு அண்ணன்.. ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா.. உப்பில்லா நைவேத்தியம்

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் புரட்டாசி மாதப் பெருவிழா வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உப்பில்லாத நைவேத்தியம் படைக்கப்படும் இந்த ஆலய பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு அண்ணனாக போற்றப்படுகிறார்.

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். நம் ஊரில் மனைவி சமைத்த உணவில் சிறிதளவு உப்பு கூடினாலோ, உப்பு குறைந்தாலே திட்டுவது கணவரின் வழக்கம். ஆனால் மனைவிக்கு சமையலில் உப்பு போடத் தெரியாது என்பதற்காக வருடம் முழுவதும் உப்பில்லாத உணவை சாப்பிடுகிறார் பெருமாள். மனைவிக்காக உப்பையே துறந்த ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதி கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசிப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு விழா வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Puratasi festival on 17th September at uppiliyappan Temple, Kumbakonam

வரும் 18ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பெருமாள், தாயாருடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 25ஆம் தேதி காலை நடைபெறுகிறது. அதேபோல, வரும் 26ஆம் தேதி மூலவர் திருமஞ்சனம், சப்தாவரணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை உதவி ஆணையர் சாந்தா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

சோழ நாட்டு திருப்பதிகளில் ஒப்பிலியப்பன் ஆலயம் முக்கியமான தலமாகும். 108 திவ்ய தேசங்களில் இது 13வது திவ்ய தேசமாகும். இந்த திவ்ய தேசம் வைகுந்தம் 'தென்திருப்பதி' என அழைக்கப்படும் சிறப்புப்பெற்றது. இத்தல இறைவன் திருப்பதி பெருமாளுக்குத் தமையனார். அதனால் அவரது பிராத்தனைகளை இத்தலத்தில் செலுத்தலாம். முன்பு வைகுண்டத்திலிருந்த திருமால், அடியார்கட்கு அருள்புரியும் பொருட்டு திருவேங்கடம் திருப்பாற்கடல், அழகிய புஷ்பங்களில் வண்டுகள் கிளரக்கூடிய திருக்கடிகை, திருவிண்ணகர் ஆகிய திவ்ய தேசங்களில் இளமை குன்றாது திகழ்கின்றான் என்று பேயாழ்வாரால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட இந்த திருவிண்ணகர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது.

திருவிண்ணகர் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் ஒப்பற்றவனாய் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி ஸ்ரீநிவாசனாய், பூமி தேவி நாச்சியார் வலப்பக்கம் மண்டியிட்டு வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் வணங்கும் திருக்கல்யாணக் கோலத்துடனும், இடப்பக்கம் மார்க்கண்டேய முனிவர் மண்டியிட்டு கன்னிகாதானம் செய்து தரும் கோலத்திலும் காட்சி தருகின்றனர். ஒப்பிலியப்பன் ஸ்ரீநிவாஸன் என்று பெயர். வெங்கடாசலபதியைப் போன்ற அதே தோற்றத்துடன் நின்ற திருக்கோலம், 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

Puratasi festival on 17th September at uppiliyappan Temple, Kumbakonam

திருப்பதி ஸ்ரீநிவாஸருக்கு தமையனார் என்கிற ஐதீஹம். திருப்பதி போக இயலாதவர்கள், வேங்டேசருக்குச் செய்துகொண்ட ப்ரார்த்தனைகளை இங்கேயே செலுத்துகிறார்கள். 1௦8 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் பெருமாளுக்கு உப்பில்லாத நிவேதனம் செய்யப்படுகிறது. இங்கே பெருமாளை வணங்க வருகிறவர்கள் யாராயினும் சரி, கோவிலுக்குள் உப்பையோ, உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் செல்லக்கூடாது. அப்படி கொண்டு சென்றால் அது மிகப்பெரிய பாவம் அவர்கள், நரகத்திற்கு செல்வார்கள் என்று தல புராணம் கூறுகிறது.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த ஆலயத்தில் வரும் 17ஆம் தேதி புரட்டாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இக்கோவிலுக்கு வந்து பெருமாளையும் பூமாதேவியையும் வணங்கினால், அவர்களது குடும்பத்தில் கணவன் மனைவியர் இருவருக்கிடையில், சகிப்புத்தன்மை பெருகி இருவரிடையேயும் அன்னியோன்யம் அதிகரித்து திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் மன நிம்மதி கைகூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+