விரத நாட்களில் சமையல்.. வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஏன் பயன்படுத்த மாட்டார்கள் தெரியுமா?
சென்னை: விரத நாட்களில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் காரணம் உள்ளது. வெங்காயம் சமையலுக்கு மட்டும்தானா ஆயுர்வேத மருந்தாகவும் கண் திருஷ்டி செய்வினை கோளாறு போக்கும் அற்புதமான காய்கறியாகவும் உள்ளது வெங்காயம்.
வெங்காயத்தின் தத்துவம்: உரிக்க உரிக்க உரியும் வெங்காயம், கடைசியில் ஒன்றும் இல்லாத வெறுமையை உணர்த்தும் தத்துவார்த்தமான காயாகும். அன்றாட சமையலுக்கு மட்டுமல்ல ஜோதிட ரீதியாகவும், மருத்துவரீதியாகவும் பயன்படுகிறது வெங்காயம். இதை விரதம் இருப்பவர்கள் சமையலில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள்.

வெங்காயத்தின் வரலாறு: கல் நெஞ்சக்காரர்களின் கண்களையும் குளமாக்கும் தன்மை கொண்டது வெங்காயம். சமையலில் வெங்காயம் பயன்படுத்தப்படுவது இன்றைய நேற்றைய சமாச்சாரமில்லை கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயத்தை பயிரிட்டு சமைத்து சாப்பிட்டு வந்திருக்கின்றனர். காரணம் அதன் நன்மைகள்தான். பண்டைய ரோம, கிரேக்க, எகிப்து, இந்திய, சுமேரிய,சீனர்கள் வெங்காயத்தை பயன்படுத்தியத்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
வெங்காயத்தில் வேதிப்பொருள்: வெங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், கந்தகம் கலந்துள்ளது. அல்லிசின் அல்லீன் ஆகியவை உள்ளன. இவை காற்றில் பரவி வெங்காயத்தை உரிக்கும் பொழுதும் நறுக்கும் பொழுதும் கண்களில் நீரை வரவழைக்கின்றன. மேலும், ஃபிளேவனாய்டுகள், பினோலிக் அமிலம் மற்றும் ஸ்டிரால்கள் போன்றவை காணப்படுகின்றன.
வெங்காயத்தின் வகைகள்: யூனியோ என்ற இலத்தின் வார்த்தையில் இருந்து தோன்றியது ஆனியன். இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தில் பெர்முடா வெங்காயம், வெள்ளை வெங்காயம், சிப்போலினி வெங்காயம், எகிப்த் வெங்காயம், பச்சை வெங்காயம், லீக்ஸ் வெங்காயம், மாவி வெங்காயம், முத்து வெங்காயம், ஊறுகாய் வெங்காயம், ஸ்பானிஷ் வெங்காயம், மஞ்சள் வெங்காயம், வெல்ஷ் வெங்காயம் என பட்டியல் நீள்கிறது. இவற்றில் சிகப்பு வெங்காயம் மற்றும் ஷேலட்ஸ் எனப்படும் சின்ன வெங்காயம்தான் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வெங்காய வகைகள்.
விலை உச்சத்தில்: வெங்காயம் இல்லாமல் சமையலில் ருசியே இல்லை. சாம்பார், காரகுழம்பு, கூட்டு, பொரியல் என அனைத்திலும் ஒரு கைபிடி அளவு வெங்காயம் போட்டால்தான் சுவையே. ஆனால் இன்றைக்கு வெங்காயத்தின் விலையே உச்சத்தில் இருக்கிறது. ஆனாலும் இல்லத்தரசிகள் வெங்காயம் வாங்கி சமைக்க தவறுவதில்லை காரணம் வெங்காயம் இல்லாத சமையல் ருசிப்பதில்லை.
வெங்காயம்: உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதோடு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது வெங்காயம். பல நாடுகளில் வெங்காயத்தை மருந்தாக பயன்படுத்துகின்றனர். பாட்டி வைத்தியத்தில் வெங்காயத்திற்கு தனி இடம் உண்டு. தலைமுடியில் ஏற்படும் பிரச்சினைகளை வெங்காயம் தீர்க்கிறது.
என்னென்ன சத்துக்கள்: வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. மேலும் சிறந்த பால் உணர்வுத் தூண்டுவியாகவும் இது செயல்படுகிறது. பல நூறு ஆண்டுகளாகவே வெங்காயம் பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின்னர் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
மருந்தாகும் வெங்காயம்: ஆயுர்வேத மருந்துக்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வெங்காயம் தாம்பத்ய விசயத்திற்கு அதிக நன்மையை தருகிறது. விரத நாட்களில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவைகளை சேர்ப்பதில்லை. இறைவனைப் பற்றிய சிந்தனை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன
ஜோதிடத்தில் வெங்காயம்: பாற்கடலில் அமிர்தம் கடையும் போது சுவர்ணபானு என்ற அசுரன் அமிர்தம் உண்டதால், விஷ்ணுவால் இரண்டாக வெட்டப்பட்டான். தலையான ராகுவாக மாறியது. அந்த தலையின் வாயிலிருந்து வெளிவந்த எச்சிலே பூண்டு மற்றும் ரத்தமே வெங்காயம் என விஷ்ணு புராணம், சிவ புராணம் கூறுகிறது. ஜோதிடத்தில் பூண்டு மற்றும் வெங்காயம் ராகுவின் காரகத்துவத்தில் வருகிறது. அதனாலே பூண்டு மற்றும் வெங்காயம் யோகி மற்றும் தபஸ்விகளாலும் தவிர்க்கப்படுகிறது.
விரத நாட்களில் நோ: வெங்காயம் இயற்கை வயாக்கரா என வர்ணிக்கப்படுகிறது. முருங்கைக்காயை விட வெங்காயத்திற்கு அதிகளவில் பாலியல் உணர்வு தூண்டும் சக்தியுள்ளது. அதனால் தான், விரதம் இருப்பவர்களும், துறவிகளும் உணவில் வெங்காயத்தை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். பாலியல் உணர்வை தூண்டிவிடும் என்பதால் தான் விரத நாட்களில் விலக்கி வைக்கப்படுகிறது.
செய்வினை கோளாறு நீக்கும்: சின்ன வெங்காயமோ, பெரிய வெங்காயமோ சிவப்பு நிற வெங்காயத்திற்கு கண் திருஷ்டி கோளாறு, செய்வினை கோளாறுகளை போக்கும் சக்தி உள்ளது உங்கள் வீட்டில் அல்லது உடம்பின் மீது துர்நாற்றம் வீசினால் கண் கோளாறுகள் தாக்கியிருக்கக் கூடும். இதனால் பயப்பட வேண்டாம். இரவில் படுக்கும் முன்பு தலையணைக்கு அடியில் இரண்டு வெங்காயத்தை வைத்து படுத்து விட்டு காலையில் எழுந்து தூரமாக வீசி விட வேண்டும். இதனால் கண் திருஷ்டிகள் நீங்கும்.
குதிரை பலம்: வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் குதிரை பலம் கிடைக்கும் என ஈரானில் நடைபெற்ற மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கு காரணம் வெங்காயத்தில் உள்ள செலினியம் என்னும் தாது உப்புதானாம். செலினியம் உப்பு ஆண்களின் ஆன்டிஆக்ஸிடென்ட் என்ற ஹார்மேனை அதிகமாக்கி டென்டோஸ்டிரான் என்ற ஹார்மேன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.
தாம்பத்ய வாழ்க்கை: வெங்காயத்தை தினசரி சாப்பிடுவதன் மூலம் தம்பதியரின் காதல் உணர்வுகள் அதிகரித்து குழந்தை பேறு இல்லாதவர்களுக்கும் குழந்தை பேறு கிடைக்கும் என்கிறது அவ்வறிக்கை. இதனால் ஈரானியர்கள், எகிப்தியர்களும் பல ஆண்டுகளாகவே வெங்காய ஜீஸ் குடித்து தங்களது படுக்கை அறையை அமைத்துக்கொள்கிறார்களாம். இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் வெங்காயச் சாறு சேர்த்து ஒரு நாளுக்கு மூன்று முறை எடுத்துக் கொண்டால், லிபிடோ மற்றும் பாலியல் உணர்ச்சியானது அதிகரிக்க தொடங்கி,தாம்பத்ய வாழ்க்கை சீராக இருக்கும்.












Click it and Unblock the Notifications