தப்பித் தவறிகூட காலையில் இதை பார்த்துடாதீங்க.. தூங்கி எழுந்ததும் எதை பார்த்தால் அதிர்ஷ்டம்.. செமல்ல
சென்னை: தினமும் நாம் தூங்கி எழுந்ததும், அந்த நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க வேண்டுமானால், அந்த நாளில் செய்யும் காரியம் வெற்றிகரமாக அமைய வேண்டுமானால், சில பொருட்களை நாம் கண்ணால் பார்க்காமல் இருப்பது நல்லது என்பார்கள்.. அந்தவகையில், காலையில் தூங்கி எழுந்ததும் முதன் முதலாக நாம் செய்யும் காரியம், நாம் பார்க்கும் பொருள்கூட, அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்பப்படுகிறது. அவைகளை பற்றிதான் சுருக்கமாக இங்கே பார்க்க போகிறோம்.
வாஸ்து படி சில பொருட்களை காலை எழுந்தவுடன் பார்ப்பதை தவிர்த்துவிட வேண்டும்.. அந்தவகையில் முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்கக்கூடாது என்பார்கள்.. அது அமங்கலமானதும்கூட.. காலையில் கண்ணாடியில் முகத்தை பார்த்தால், அன்றைய நாள் முழுவதுமே உங்களது செயலில் பாதிப்புகள் வரலாம்.

எதிர்மறை தாக்கங்கள்
அதேபோல, காலையில் எழுந்ததுமே, அழுக்கு பாத்திரங்களை பார்ப்பது ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல, உங்களது நிழலை பார்ப்பதும் நல்ல விஷயமாக கருதப்படுவதில்லை... அழுக்கு, குப்பைகளை பார்ப்பதும் நேர்மறையான தாக்கத்தை உண்டுபண்ணிவிடும். காலியான பாத்திரங்கள், உதிர்ந்த தலை முடி, சிதறிக் கிடக்கும் பொருட்களை பார்க்கக்கூடாது.
துடைப்பத்தையும் பார்க்கக்கூடாது.. இது பண சிக்கலை உண்டுபண்ணிவிடும்.. அதேபோல தூங்கி எழுந்ததுமே செல்போனை பார்க்கக்கூடாது. காரணம், நாம் பார்க்கும் முதல் காட்சியே ஏதாவது துக்கம் தரக்கூடிய செய்தியாக அல்லது நெகட்டிவ் செய்தியாக இருக்கலாம். உணர்ச்சிகளை பாதிக்கக்கூடிய சண்டை சச்சரவுகளையும் பார்க்கக்கூடாது..
என்ன பார்க்கலாம்
அப்படியானால், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததுமே என்ன பார்க்கலாம்? வலது உள்ளங்கையை கண்விழித்து பார்ப்பது சிறப்பு.. இதனால் நாள் முழுவதும் மங்களகரமான காரியங்கள் சுமூகமாக நடக்கும்.. அம்மா, மனைவி, குழந்தைகள் ஆகியோரின் முகத்தில் விழிக்கலாம்.
அதேபோல சூரியனை தரிசித்து வணங்கலாம்.. சூரியன் உதிக்கவில்லை என்றாலும் கூட அந்த திசையை பார்த்து வேண்டிக் கொள்ளலாம். சூரியன் போலவே, தாமரைப் பூ, சந்தனம், கடல் போன்ற இயற்கை காட்சிகளில் கண் விழிக்கலாம்.. அதற்காக ஆக்ரோஷமாக எழும் கடல் அலைகள், பற்றி எரியும் நெருப்பு போன்றவற்றை பார்க்கவே கூடாது.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
சிவலிங்கம், ராஜகோபுரம் , பசுமாடு, வாசம் மிக்க பூக்கள், பூந்தோட்டம் போன்றவற்றையும் பார்க்கலாம். இதில் கோபுர தரிசனம் வசதி இருந்தால் கட்டாயம் அதில் கண்விழிக்கலாம். காரணம் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்...
இசைக்கருவிகள், மஞ்சள், குங்குமம், விபூதி போன்றவற்றை காலையில் காண்பதாலும் அன்றைய நாள் நன்றாக அமையும்... அதேபோல, வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் வைத்திருப்பவர்கள் இரவு தூங்கும் முன்பு, அவைகளை அருகில் வைத்து விட்டு தூங்கி, மறுநாள் காலையில் எழுந்தவுடன் அவைகளை பார்த்தால் நல்லது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications