தூதுவளை தூதுவனின் தூபம்.. துயரம் தீர்க்கும் தூதுவளை இலை பரிகாரம்! வீட்டில் மகிழ்ச்சி, நன்மை பொங்கும்
சென்னை: இறைவனுக்கு தூது செல்லக்கூடிய சக்தி, தூதுவளைக் கீரைக்கு உண்டு என்பார்கள்.. அந்தவகையில், தூதுவளையை எப்படி பயன்படுத்த வேண்டும்? தூதுவளை பொடியால் குடும்பத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தூதுவளையை பொறுத்தவரை, மிகசிறந்த ஆண்டிபயாடிக் மூலிகையாகும்.. இதன் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி குடித்துவந்தால், சளி, காய்ச்சல் நெருங்காது.

மருத்துவ குணம்: இந்த இலையிலிருந்து சாறு எடுத்து, அதில், சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடிக்கும்போது, சளி, இருமல் குணமாகும். கெட்ட கழிவுகளும் நீங்கும். நரம்புத் தளர்ச்சி பாதிப்புள்ளவர்களுக்கு இந்த தூதுவளை சிறந்த மருந்து.. ஆண்மை குறைபாடுகளை நீக்குவதில் பிரதானமானது.
ரத்த சோகையை தீர்க்கக்கூடிய இந்த தூதுளை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது.. இந்த இலையின் சாற்றில் தேன் கலந்து குடித்தால், நுரையீரல் தொற்று, ஆஸ்துமாவுக்கு தீர்வு கிடைக்கும். கண் கோளாறுகளும் நெருங்காது. தூதுவளை பூக்கள், மொட்டுக்களை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து காய்ச்சிய பாலில் குடித்து வருவதால், கருப்பை புற்றுநோய் முதல் எந்த புற்றுநோயும் வராமல் தடுக்கலாம்.
முக்கியத்துவம்: இத்தனை மருத்துவ குணம் இருந்தாலும் ஆன்மீகத்திலும் தூதுவளைக்கு முக்கிய இடமுண்டு.. தினமும் காலையில் குளித்து முடித்து, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்திற்கு அருகில் ஒரே ஒரு தூதுவளை இலையை வைத்துவிட வேண்டும். தூதுவளைக் கீரையை உங்கள் கையில் வைத்து கொண்டு, உங்களது மனக்குறை, வேண்டுதல், கோரிக்கை எதுவானாலும் இறைவனிடம் சொல்லி வரலாம்.
உங்கள் வேண்டுதல் முடிந்ததுமே, கையிலிருக்கும் தூதுவளை இலையை, இறைவனின் பாதங்களில் வைத்து விட வேண்டும். மறுநாள் இதேபோல செய்யும்போது, புதிய தூதுவளை இலையை பயன்படுத்த வேண்டும். தினமும் இப்படி வேண்டுதலை சொல்லி, இறைவனின் பாதத்தில் வைக்கும்போது, அது இறைவனிடம் கொண்டு செல்லும் தூதாக கருதப்படுகிறது. இப்படி 48 நாட்கள் செய்யும்போது, மிகப்பெரிய மாற்றம் உங்கள் வாழ்க்கையில் வரலாம்.
சாம்பிராணி: அதேபோல, சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும் என்பார்கள். இதற்காக வீட்டில் தடைப்பட்டிருக்கும் சுபநிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்க வேண்டுமானால், தூபத்தில் துளசி விதைகளையும், தூதுவளை பொடியையும் போட்டு, அந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். இதனால், உங்களுடைய குல தெய்வம், உங்கள் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கையாகும்.
அதேபோல, தூதுவளை இலையை காய வைத்து பவுடர் செய்து, அதில் தூபம் போடும்போது தெய்வ நிந்தனைகளிலிருந்தும், முன்னோர்களின் சாபத்திலிருந்தும் விடுபடலாம் என்றும் சொல்கிறார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications