திருப்பதி ஏழுமலையானை கூட்டத்தில் அடிபடாமல் மிதிபடாமல் தரிசிக்கணுமா? இந்த மாதங்களில் கிளம்புங்கள்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா, கூட்டம் இல்லாத மாதங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திருப்பதி என்றாலே முதலில் லட்டை விட நினைவுக்கு வருவது அங்கு வரும் கூட்டம்தான். எந்த நேரத்தில் போனாலும் திருப்பதியில் அலைமோதும். சிறியதாக வார விடுமுறை கிடைத்தாலும் கூட மக்கள் விரும்பி செல்லும் இடம் திருப்பதிதான்.

அதிலும் தகவல் தொழில்நுட்பம், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை என்பதாலும் வங்கி ஊழியர்களுக்கு எல்லா ஞாயிறுகளிலும் குறிப்பிட்ட சனிக்கிழமைகளில் விடுமுறை என்பதாலும் அவர்கள் குடும்பத்துடன் செல்லும் இடம் திருப்பதிதான்.
ஏழுமலையானை பார்க்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. கண் குளிர பார்த்தாலும் (ஜர்கண்டி சொல்லும் போது சட்டை செய்யாமல்) மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க சுவாமியை காணும் வினாடிகள் மிக மிக குறைவாக இருக்கும்.
சில நேரம் நிற்கக் கூட விடாமல் தள்ளிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். மணிக்கணக்கில் காத்திருந்து திடீரென நம்மை அரை நொடி கூட பார்க்க விடாமல் தள்ளி விடும் போது மனதிற்கு கஷ்டமாகவே இருக்கும். திருப்பதிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். அது போல் பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும்.
திருப்பதியில் மட்டும் எத்தனை கூட்டம் வந்தாலும் தேவஸ்தான நிர்வாகத்தினர் அதை சமாளிக்கிறார்கள். திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்றால் பல மாதங்களுக்கு முன்பே காத்திருந்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு சென்றாலும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
எப்பதான் திருப்பதியில் கூட்டம் குறையும் என கேள்வி நமக்குள் எழும். எல்லாவற்றையும் விட "அது ஏன்டா ஆவுன்னா லீவு விட்டா திருப்பதிக்கு வந்துடறீங்க"ன்னு சிலர் திருப்பதியில் இருந்தே மனதிற்குள் கேட்பதுண்டு. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய சிறந்த மாதம் என்றால் பிப்ரவரியும், நவம்பரும்தான்.
இந்த மாதங்களில் மிதமான தட்பவெப்பநிலை நிலவும் என்பதால் இது பக்தர்களுக்கு நல்லதொரு உணர்வை ஏற்படுத்தும். கோடை விடுமுறையில் கூட்டம் அலைமோதும் சுவாமி தரிசனம் செய்யவே ஒன்றரை நாட்கள் ஆகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை (புரட்டாசி தொடங்காத வரை) பள்ளி, கல்லூரிகள் திறந்துவிடும்.
இதனால் அந்த மாதங்களில் திருப்பதி சென்றால் விரைவாகவும் நிம்மதியாகவும் சுவாமி தரிசனம் செய்யலாம். அது போல் ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படும். எனவே திருப்பதிக்கு அந்த பண்டிகையின் போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தவர்கள் வரமாட்டார்கள். எனவே விநாயகர் சதுர்த்தியின் போதும் கூட்டம் குறைவாக இருக்கும். அது போல் பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது திருப்பதியில் கூட்டம் குறைவாக இருக்கும்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications