திருப்பதி ஏழுமலையானுக்கு சேவை.. உண்டியல் காணிக்கை எண்ண விருப்பமா?.. அப்ளை பண்ணுங்க
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024 பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் தன்னார்வலர்களாக சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் வரும் 27ஆம் தேதி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மணிக்கணக்கில் காத்திருந்தாலும் சில நிமிடங்கள் மட்டுமே ஏழுமலையான் தரிசனம் கிடைக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் பக்தர்கள் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர்.

விரைவு தரிசனத்திற்காக 300 ரூபாய் டிக்கெட் ஆன்லைனில் புக் செய்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். 4 மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் இணைய தள பக்கத்தில் வெளியிடப்படும். அங்கப்பிரதட்சணம், கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் 21ஆம் தேதி வெளியான நிலையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் நாளைய தினம் வெளியிடப்பட உள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள அறைகளும் நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in இணையதளத்தில் தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயிலில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 அன்று நடைபெறும் ரதசப்தமிக்காக தன்னார்வலர்களாக ஸ்ரீவாரி சேவா திட்டத்தில் சேவை செய்வதற்கான முன்பதிவு இந்த மாதம் 27ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். இதற்காக 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த தன்னார்வலர் சேவையில் பதிவு செய்ய தகுதியுடையவர்கள்.
இதேபோல், 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான ஸ்ரீவாரி சேவை மற்றும் நவநீத சேவையில் பங்கேற்க இந்த மாதம் 27 அன்று மதியம் 12 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்களுக்கு சேவை செய்வதற்கான தன்னார்வ சேவைக்காக வெளியிடப்படும்.
அதே நாளில் மாலை 3 மணிக்கு உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணி சேவையில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்வதற்காக www.tirumala.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications