திருப்பதி ஏழுமலையானை ஜூன் மாதம் தரிசிக்க சூப்பரான வாய்ப்பு! மிஸ் பண்ணாதீங்க
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஜூன் மாதம் முழுக்க பக்தர்கள் தரிசனம் செய்ய சூப்பரான சான்ஸ் உள்ளது. எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் பணக்கார கடவுள் ஏழுமலையான் கோவில். தினசரியும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.
திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்துவிடுகின்றனர்.
இந்த கோயிலில் தினமும் சிறப்பு தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் குவிந்து வருகிறது. வெளி மாவட்டம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறையையொட்டி திருமலையில் கடந்த சில தினங்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
ஒரு நாள் முழுவதும் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் திருமலையில் நடக்கும் சிறப்பு திருவிழாக்கள் குறித்த விவரங்களை திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலையில் உள்ள ஆகாசகங்கை, அஞ்சனாத்திரி, பால ஆஞ்சநேயசுவாமி கோயில்களில் ஜூன் 1 முதல் 5ஆம் தேதி வரை அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் 2ஆம் தேதி மஹி ஜெயந்தியும் ஜூன் 19 முதல் 21 ஆம் தேதி வரை ஜ்யேஷ்டாபிஷேகமும் நடைபெறுகிறது.
பால ஆஞ்சநேய சுவாமி கோயிலில் ஜூன் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை காலை 8.30 மணி முதல் 10 மணி வரை அபிஷேகம் நடக்கிறது. முதல் நாள் மல்லிகை அபிஷேகம், இரண்டாம் நாள் வெற்றிலை, மூன்றாம் நாள் ஏற்றக்கண்ணேறு, கனகாம்பரம், நான்காம் நாள் சாமந்தி, ஜூன் 5 இல் குங்குமப்பூ ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
மேலும் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை ஹனுமன் சாலீசா பாராயணம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை நாட்டியக் கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இவையெல்லாமே பக்தர்கள் மத்தியில் நடைபெறுகிறது.
ஜூன் 20 ஆம் தேதி ஸ்ரீநாதமுனுல வர்ஷ திரு நட்சத்திரமும், ஜூன் 22ம் தேதி பௌர்ணமி கருடசேவையும் நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த நாட்களை கருத்தில் கொண்டு நீங்கள் திருப்பதிக்கு டிக்கெட் போட்டால் சிறப்பு தரிசனம் செய்யலாம்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications