திருத்தணிக்கு போறீங்களா? இன்று முருகன் கோயில் நடை 4 மணி நேரம் மூடல்! கோயில் நிர்வாகம் அறிவிப்பு
திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் இன்று 4 மணி நேரம் மூடப்படுகிறது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு இந்த நடை சாற்றுதல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 5ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை தரிசிக்கிறார்கள்.

இதே ஏதாவது பண்டிகை என்றால் அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் முருகனை தரிசிப்பார்கள். பக்தர்களின் வசதிக்காக காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடர்ந்து கோயில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் திங்கள்கிழமையான இன்று ஆவணி அவிட்டம் என்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை முருகன் கோயில் நடை திறக்கப்படாது என்றும் மூடியே இருக்கும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே இந்த 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அந்த நேரத்தில் கோயிலில் உள்ள அனைத்து அர்ச்சகர்களும் தலைமை குருக்களும் பூணூல் மாற்றிக் கொள்வார்கள். எனவே மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் இரவு 8.45 மணி வரை சுவாமியை தரிசனம் செய்யலாம். இவ்வாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications