கோலாகலமாக நடந்த திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்! ஓம் சக்தி, பராசக்தி என கோஷம்
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி என கோஷமிட்டனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சித்திரை தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த வகையில் நேற்று சித்திரை மாதம் பிறந்தது. இன்றைய தினம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் தேரோட்ட விழா நடத்த கடந்த 6ஆம் தேதி கொடியேற்றம் நடந்தது.
இதையொட்டி தினமும் உற்சவர் அம்மன் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்டவைகளில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் வீதியுலா வந்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்வு நடந்தது.
இந்தநிலையில் இன்றைய தினம் தேரோட்டம் நிகழ்ந்தது. காலை 10.31 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். அப்போது மேளதாளங்கள் முழங்கி அதிர்வேட்டுகள் ஒலித்தன. காலை 11.30 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என கோஷமிட்டது விண்ணை அதிரும் அளவுக்கு இருந்தது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரத்திற்கு பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தி பால்குடம் எடுத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தையொட்டி மருத்துவ முகாம்கள், குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேரோட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க 2000 -க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கூட்டத்தை போலீஸார் கண்காணித்தனர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications