Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீடு, கார் வாங்க வேண்டுமா? 6 வாரங்கள், 6 வெற்றிலைகளுடன் செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாடு செய்யுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 6 வாரங்கள் இந்த வேண்டுதலை நடத்தினால், நீங்கள் கேட்ட வரத்தை முருகன் கொடுப்பார். நம்பிக்கையுடன் வேண்டுங்கள்.

இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் கூறியிருப்பதாவது: நினைத்தது நிறைவேற செவ்வாய்கிழமை வழிபாடு. செவ்வாய்கிழமையில் முருகப் பெருமானை வேண்டி எந்த வழிபாடு, விரதம் ஆகியவற்றை மேற்கொண்டாலும் அது பல மடங்கு அதிகமான பலனை தரும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் அது நிச்சயம் பலன் தரும்.

murugan

செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வழிபாடு, பைரவர் வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவானுக்கு உரிமையான நாள் என்பதாலேயே செவ்வாய்க்கிழமை என குறிப்பிடுகிறோம். முருகுப் பெருமானுக்கு திதி, நட்சத்திரம், கிழமை என மூன்று விதமான விரதங்கள் கடைபிடிக்கப்படுக்கின்றன. செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதை முருகப் பெருமான் என்பதால் செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது.

திதி அடிப்படையில் விரதம் இருந்தால் 15 நாட்களும், நட்சத்திர அடிப்படையில் விரதம் இருந்தாலும் மீண்டும் அந்த நட்சத்திரம் வருவதற்கு ஒரு மாதமும் காத்திருக்க வேண்டும். ஆனால் கிழமை அடிப்படையில் விரதம் இருப்பது குறுகிய கால விரதம் என்றாலும், மிக விரைவாக பலன் தரக் கூடியதாகும். செவ்வாய் பகவான், வீடு, நிலம், சொத்து ஆகியவற்றிற்கு காரணமான கிரகம் என்பது அனைவருக்கும் தெரியும். செவ்வாய் பகவானை வழிபட்டால் வீடு, வாகன யோகம் அமையும்.

அதை விட முக்கியமானது செவ்வாய் பகவான் தான் ரத்தம் தொடர்பான நோய்களுக்கும் காரணமானவர். இவரே உடல் வலிமை, தைரியம் ஆகியவற்றிற்கும் காரணமான கிரகமாக கருதப்படுகிறார். அங்காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவானை, முருகப் பெருமானின் திருநாமங்களில் ஒன்றான குமாரன் என்ற திருநாமத்தாலும் குறிப்பிடுவதுண்டு.

மனித உடலில் முகம், ரத்தம், சுரப்பிகள், கல்லீரல், இடது காது, எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் ஆகியவற்றிற்கு செவ்வாய் பகவான் தான் காரணமானவராக இருக்கிறார். இதனால் செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து, அவருக்குரிய அதி தேவதையான முருகப் பெருமானை வழிபடுவதால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் அனைத்தும் குறையும். அதோடு சில குறிப்பிட்ட வழிபாடுகளை செவ்வாய் கிழமையில் வரும் செவ்வாய் ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான காலத்தில் செய்யும் போது அதற்கு விரைவான பலன் கிடைக்கும்.

என்ன நினைத்து இந்த வழிபாட்டினை செய்கிறோமோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். அதோடு வாழ்க்கையில் ஏற்றம் என்பது இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையை மாற்றும் சிறப்பான வழிபாடு என்று கூட இதை சொல்லலாம். செவ்வாய்க்கிழமையில் காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

பிறகு ஒரு தட்டினை எடுத்துக் கொள்ளுங்கள். எவர்சில்வர், பிளாஸ்டிக் இல்லாத மற்ற உலோகங்களால் ஆன தட்டுக்களை பயன்படுத்துவது சிறப்பு. அதன் மத்தியில் மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்துக் கொள்ளுங்கள். 6 என்ற எண்ணிக்கையில் வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் காம்பு பகுதியை கிள்ளி எடுத்து விடுங்கள். வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் என்றாலும், அதன் காம்பு பகுதியில் மூதேவி வசிப்பதாக ஐதீகம். அதனால் அதனை அகற்றி விட்டு, ஆறு வெற்றிலைகளின் மேல், நடு, நுனி பகுதியில் மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த வெற்றிலைகளை விசிறி போல் தட்டில் பரப்பி வையுங்கள்.

ஆறு வெற்றிலைகளின் நுனி பகுதியும் வெளிபுறமாக இருப்பது போலவும், அடிப்பகுதி உட்புறமாக இருப்பது போலவும், அந்த வெற்றிலைகள் ஒன்றின் மீது ஒன்று படும் வகையிலும் வைக்க வேண்டும். அந்த ஆறு வெற்றிலைகளிலும் பூ வைத்து, மத்தியில் ஒரு அகல் விளக்கினை ஏற்றி வையுங்கள். நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி, அந்த விளக்கில் கிள்ளி வைத்த வெற்றிலை காம்புகளை போட்டு, விளக்கு ஏற்ற வேண்டும். ஆறு வெற்றிலைகளிலும் படும் வகையில் விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். பிறகு முருகப் பெருமானை மனதார நினைத்து, உங்களின் வேண்டுதலை சொல்லி முறையிடுங்கள்.

இந்த விளக்கு அரை மணி நேரமாவது பூஜை அறையில் எரிய வேண்டும். வெற்றிலை தீபம் மட்டுமின்றி செவ்வாய்கிழமையில் வீட்டின் பூஜை அறையில் சட்கோண கோலமிட்டு, அதன் மீது ஆறு நெய் விளக்குகள் ஏற்றியும் வழிபடலாம். இப்படி ஏற்றுவதால் அந்த ஆறு விளக்குகளிலும் முருகப் பெருமானின் ஆறுமுகங்களும் எழுந்தருளி, நமக்கு அருள் செய்யும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு நைவேத்தியமாக இரண்டு வாழைப்பழங்கள் அல்லது சர்க்கரை கலந்த பால் என எது வேண்டுமானாலும் வைக்கலாம்.

இந்த இரண்டில் ஏதாவது ஒரு வழிபாட்டினை செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஓரையில் தொடர்ந்து 6 வாரங்கள் செய்து வர வேண்டும். ஆறு வாரங்களில் இந்த வழிபாடு நிறைவு செய்வதற்குள், உங்களின் வேண்டுதல் நிறைவேற துவங்கி விடும். இவ்வாறு தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+