கை தவறி கூட இந்த பொருட்களை கீழே போடாதீர்கள்..வறுமை வந்து விடுமாம்.. வாஸ்து டிப்ஸ்
சென்னை: நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யக்கூடிய சில விசயங்கள் நம்முடைய வீட்டில் கஷ்டத்தை கொண்டு வந்து விடும். சிலர் சின்னச் சின்ன சண்டைக்கு கூட கையில் கிடைக்கும் பொருட்களை வீசி எறிவார்கள். நாம் நம்முடைய வீட்டில் இருக்கும் பொருட்களை வீசி எறிந்தால் கஷ்டத்தையும் வறுமையையும் வரவேற்பது போலாகிவிடுமாம். எனவே கை தவறியும் கவனக்குறைவாகவும் கூட சில பொருட்களை நாம் கீழே போடக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சண்டை இல்லாத வீடு இருக்காது, சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் சில வாய் சண்டையோடு நின்று விடுவார்கள். சிலரது வீடுகளில் சாப்பாட்டு தட்டு கூட பறக்கும். அப்படி சண்டையின் போது உணவு சாப்பிடும் தட்டினை தூக்கி வீசி எறிந்தால் அன்னதோஷம் ஏற்பட்டு விடுமாம். இதன் மூலம் அன்னபூரணியின் கோபத்திற்கு ஆளாகி சில நேரங்களில் உணவு கிடைக்காமல் சிரமப்பட நேரிடுமாம். எனவே எந்த சூழ்நிலையிலும் நாம் நம்முடைய சாப்பாட்டு தட்டினை வீசி எறியக்கூடது.

நம்முடைய வீட்டில் சில நேரங்களில் சில பொருட்கள் கை தவறி கீழே விழுவது இயற்கைதான். அடிக்கடி பொருட்களை கீழே போடக்கூடாது என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாஸ்து தோஷம் இருக்கும் வீடுகளில்தான் பொருட்கள் அடிக்கடி கை தவறி கீழே விழும் என்று சொல்வார்கள்.
உப்பு மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தது. கல் உப்போ, தூள் உப்போ நாம் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். உப்பை ஒருபோதும் நாம் கீழே சிந்தக்கூடாது. கீழே அடிக்கடி உப்பை கொட்டுவதால் வீட்டில் சிக்கல் ஏற்படும் என்பதற்கான அறிகுறியாக இருக்கும். பணம் தொடர்பான சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால் உப்பினை யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது.
சமையல் அறையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவைகளை சிலர் அடிக்கடி தவற விடுவார்கள். அப்படி தவறவிடுவது அன்னை மகாலட்சுமியை வருத்தப்பட வைத்து விடும். செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியின் கோபத்திற்கு ஒருபோதும் ஆளாகக் கூடாது. தானியங்கள் கீழே விழுந்தாலும் அதை எடுத்து கழுவி சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
நல்லெண்ணெய், எள், கடுகு, மிளகு போன்றவைகளை நாம் சிந்தக்கூடாது. சனி பகவானுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே அஞ்சறைப்பெட்டியில் இருந்து பொருட்களை எடுக்கும் போதும் எண்ணெய் பாட்டிலை எடுக்கும் போதும் கவனமாக எடுக்க வேண்டும்.

சமையல் பாத்திரங்கள், கரண்டி, கிண்ணம், டம்ளர் போன்றவைகளை சிலர் கை தவறி கீழே விடுவார்கள். சிலர் வேண்டும் என்றே தூக்கி வீசி எறிவார்கள். எனவே ஒருபோதும் நம்முடைய வீட்டு சமையல் அறையில் உள்ள பொருட்கள் தூக்கி வீசி எறியக்கூடாது. அப்படி எறிந்தாலோ கை தவறி கீழே விழுந்தாலே மகலாட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமாம்.
பூஜை அறையில் கூட சிலர் பொருட்களை தவறவிடுவார்கள். பூஜை தட்டு, ஆரத்தி தட்டினை அடிக்கடி சிலர் தவற விடுவார்கள். சிலர் குத்துவிளக்கினை கூட தவற விடுவார்கள். அப்படி தவற விடக்கூடாது ஒருவேளை தவறி தெரியாமல் கீழே விழுந்தாலோ, ஏற்றிய குத்துவிளக்கு அணைந்தாலோ குல தெய்வத்திற்கு நாம் காணிக்கை முடிந்து வைத்து விட்டு பூஜையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications