சிவப்பு மை எழுத்து.. வெற்றிலையின் வெற்றி பரிகாரம்.. பணம், மகிழ்ச்சி பெருக்கும் கேது விநாயகர் வழிபாடு
சென்னை: கடன் தொல்லை மட்டும் இருந்துவிட்டால் ஒட்டுமொத்த நிம்மதியே போய்விடும்.. தொழிலில் நஷ்டம், நிதி நெருக்கடி, கடன் பிரச்சனை போன்றவைகளிலிருந்து விடுபடுவதற்கு, எளிய பரிகாரங்கள் உதவியாக இருக்கின்றன.. நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களை செய்யும்போது, மேற்கண்ட தொல்லைகளிலிருந்து விடுபட வழிபிறக்கும்.. அந்தவகையில் 2 வகையான பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.
உங்களது வலது கால் பாதத்தின் விரல்களுக்கு அடியில், உங்களுடைய மனப்பிரச்சனையை ஒரு சிவப்பு நிற பேனாவில், ஒரு வரியில் எழுத வேண்டும். அல்லது குறிப்பிட்ட நபரின் பெயரை எழுதி, அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் எழுதி கொள்ளலாம்.

சிவப்பு எழுத்தில் கோரிக்கை
பிறகு வலது காலை தரையில் 11 முறை தட்ட வேண்டும். ஒவ்வொரு முறை தட்டும்போதும், உங்களது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி ஏதாவது ஒரு நாள் செய்தால் போதும், விரைவில் அந்த கோரிக்கை தீரும் என்பார்கள்.
கடன் பிரச்சனை என்றில்லை, குடும்ப ஒற்றுமை தழைக்க, திருமண தடை விலக, நல்ல வேலை கிடைக்க, வருமானம் பெருக, தீராத நோய் தீர இப்படி எந்த பிரச்சனையையும் சிவப்பு மையால் எழுதலாம்.
பணப்புழக்கம் அதிகரிக்க பரிகாரம்
அதேபோல, வெற்றிலை பரிகாரமும் உதவுகிறது.. வளர்பிறை வெள்ளிக்கிழமையில், இந்த பரிகாரத்தை செய்யலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நிதி நிலைமை சீராகும்.. பணப்புழக்கமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும்.
2 வெற்றிலையும், அதன்மீது 1 ரூபாய் நோட்டு, அந்த நோட்டுக்கு மேலே 2 கொட்டைப்பாக்கு, அதன்மீது 2 வெற்றிலை வைத்து, அப்படியே சுருட்டி நூலால் கட்டி, பீரோ அல்லது பர்ஸ், அல்லது பணப்பெட்டிகளில் வைக்கலாம். வெற்றிலையை மஞ்சள் துணியில் வைத்து, அதில் ஏலக்காய் கிராம்பு, சில ரூபாய் நோட்டு, சில சில்லறைகள் போட்டு, போட்டு வைக்கலாம். 2 நாட்கள் கழிந்ததும் வெற்றிலையை மாற்றி வைக்க வேண்டும்..
வெற்றிலை பரிகாரம்
3 நாட்கள் கழிந்ததும், இந்த பணத்தை உங்கள் தேவைக்கு செலவு செய்து கொள்ளலாம். இதைத்தவிர, கேது பகவானுக்கும், அதிதேவதையான சித்ரகுப்தன் அல்லது விநாயகருக்கும் 27 வெற்றிலையை மாலையாக கட்டி அணிவிக்கலாம்..
அதேபோல, கேதுவையும் விநாயகரையும் வழிபடவேண்டும்.. கேதுவுக்கு பால், நெய் அபிஷேகம் செய்து, சிவப்பு, மஞ்சள், வெள்ளை சேர்ந்த வஸ்திரம், எருக்கம்பூ மாலை அணிவிக்கலாம். நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, அன்னதானம் வழங்க வேண்டும். இப்படி 3 முறை தொடர்ந்து செய்து வந்தால் கேதுவால் ஏற்பட்ட தோஷம் விலகி அருள் கிடைக்கும்.
நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்க
இதைத்தவிர, வியாழக்கிழமைகளில் நன்கொடைகளை வழங்குவதன் மூலம், தொண்டு செய்வதன் மூலம், வியாழனின் அருள் கிடைப்பதுடன், நிதிப் போராட்டங்களை எளிதாக்க உதவும் நேர்மறையான ஆற்றல்களை ஈர்க்கும்.. சனிக்கிழமைகளில், சனி பகவான் சிலைக்கு முன்பு நெய் தீபம் ஏற்றி வைத்து, சனி தொடர்பான மந்திரத்தை உச்சரிக்கலாம்.
வீட்டில் தேவை இல்லாமல் தண்ணீரை செலவு செய்யக்கூடாது.. இதுவும் நிதி நெருக்கடியை கொண்டுவந்துவிடும்.. தண்ணீரில் சிக்கனமாக இருந்தால், வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்பார்கள்..!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications