Vinayagar Chathurthi 2025: நாளை விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார் சிலை வாங்க நல்ல நேரம் எது?
சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் மண் பிள்ளையார் வாங்க நல்ல நேரம் எது, கொழுக்கட்டை, சுண்டல் படையல் போடுவது எப்போது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி என்பவர் கூறியிருப்பதாவது: விநாயகர் சதுர்த்தி எப்போது, அதை எவ்வாறு வழிபடுவது, அதை வழிபடும் முறை என்ன, சிலை வாங்கும் நேரம் மற்றும் கொழுக்கட்டை படையல் செய்வதற்கான நேரத்தை பார்க்கலாம்.

விநாயகர் எளிமையான கடவுள். 10 ரூபாய்க்கு அவல் பொரி, கடலை வாங்கி வைத்து, அருகம்புல் மாலை போட்டு பிள்ளையாரப்பா எனக்கு அனுகிரகம் செய் என பிரார்த்தனை செய் என வழிபட்டாலும் ஏழைகளுக்கும் அருள் புரிவார். அவரை வழிபட ரோஜா பூ, மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்கள் வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அருகை எடுத்து அவன் அருகே சென்று அர்ச்சித்தால் பகுதி, விகுதி என்கிற பல்வேறு நலன்களை அருள கூடியவர்களாக விளங்குகிறார் என விநாயகர் குறித்து அருளாளர்கள் எல்லாம் கூறியுள்ளனர். விநாயகரை வழிபட்டால் உடனடியான நலன்கள் நமக்கு கிடைக்கும்.
சிதறு தேங்காய்
ஏதோ ஒரு காரியம் தடைபட்டு கொண்டே இருக்கும் போது அந்த காரியம் நமக்கு உடனே நடக்க வேண்டும் என்றால் நான் சொல்வது, பக்கத்தில் இருக்கும் பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு ஒரு காரியத்தை தொடங்குங்கள். நிச்சயம் அந்த காரியம் வெற்றியாகும்.
சிதறு காயை உடைத்துவிட்டு என் வினைகள் எல்லாம் சிதறிவிட வேண்டும். பிரச்சினைகள் எல்லாம் நீங்க வேண்டும். நல்ல வழியை காட்டு என கேட்டால் அதன் பிறகு எல்லாமே ஏறுமுகமாகவே நடக்கும். அப்படிப்பட்ட விநாயகரை நாம் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடுவதுதான் விநாயகர் சதுர்த்தி விழா!
ஔவையார் விநாயகர் வழிபாட்டை செய்தவர். தினமும் விநாயகருக்கு பூஜை செய்த ஔவையார், ஒரு நாள் கொஞ்சம் வேகமாக வழிபாடு செய்துவிட்டார். உடனே விநாயகர் பெருமான், "பாட்டி என்ன அவசரம், ஏன் இவ்வளவு வேகமாக கும்பிடுகிறாய், எங்கே போக போகிறாய்!" என கேட்டதும் ஔவாயாருக்கு கை, கால் எல்லாம் நடுங்கியது.
அவசரமாக வழிபட்ட பாட்டி
அப்போது ஔவையார், "பிள்ளையாரப்பா என்னை மன்னித்துவிடு, சேரமான்நாயனாரை கூட்டிக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் போகிறாராம். நான் போனால் யார் என்னை உள்ளே விடுவாங்க, கைலாய தரிசனம் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் இல்லையா, அதனாலதான் இன்னிக்கு கொஞ்சம் வேகமாக கும்பிட்டேன் தவறுதான் என்னை மன்னித்துக்கோ" என்றாராம்.
அதற்கு பிள்ளையார், "பாட்டி பொறுமையா கும்பிடு, உனக்கென்ன கைலாயத்தைதானே பார்க்க வேண்டும், நான் இருக்கேன் கவலைப்படாதே!" என்று சொல்லிவிட்டு வழிபாட்டுக்கு விநாயகர் அமர்ந்துவிட்டார்.
ஔவையார் கைலாய கதை
ஔவையார் பிள்ளையாரை பொறுமையாக கும்பிடுகிறார். விநாயகர் அகவல் பாடி வழிபாடு செய்தார். அப்போது பிள்ளையார், "பாட்டி, என்னை நம்பி, விநாயகர் அகவல் பாடி பொறுமையாக கும்பிட்டாய், நம்பிக்கை வைத்தாயே" என கூறி, பாட்டியை தும்பிக்கையால் தூக்கி கொண்டு போய் எல்லாருக்கும் முன்பு கைலாயத்தை தரிசிக்க வைத்தார்.
வளர்பிறை சதுர்த்தி
விநாயகருக்கு மாதந்தோறும் சதுர்த்தி வருகிறது. வளர்பிறை. தேய் பிறை சதுர்த்திகளில் சிறப்பான வழிபாடு நடைபெறும். சங்கடஹர சதுர்த்தியையும் கொண்டாடுகிறோம். எனினும் எல்லாருக்கும் தெரிந்து கோலாகலமாக கொண்டாடக் கூடிய சதுர்த்தி மகா சதுர்த்தி இந்த விநாயகர் சதுர்த்திதான்.
பிள்ளையார் சதுர்த்தி எப்போது
இந்த விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது என சிலருக்கு யோசனை இருக்கிறது. இந்த ஆண்டு 26ஆம் தேதி பிற்பகல் 2.22 மணி முதல் அடுத்த நாள் 27ஆம் தேதி வரை மாலை 3.52 மணி வரை சதுர்த்தி திதியாகும். காலையில் சதுர்த்தி இருக்க வேண்டும் என்பதால் 27ஆம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி.
பிள்ளையார் வாங்கும் நேரம்
பிள்ளையார் வாங்கும் நேரம் 26ஆம் தேதி மாலை 4.50 மணி முதல் 5.50 மணி வரை, அப்படி இல்லாவிட்டால் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை. 27ஆம் தேதி வழிபடும் நேரம் காலை 6 மணி முதல் 7.20 மணி வரை ஆகும்.
பிள்ளையார் பூஜை
27ஆம் தேதி பிள்ளையார் வாங்குவது என்றால் காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை வாங்கலாம். பூஜையும் செய்யலாம். கொழுக்கட்டை, சுண்டல், எள்ளு உருண்டை உள்ளிட்டவைகளை படைப்பது என்றால் மதியம் 1.35 மணி முதல் 2 மணி வரை படைக்கலாம். மாலையில்தான் பூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது என்றால் மாலை 6.10 மணிக்கு மேல் விநாயகர் வழிபாட்டை செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications