சிவன் கோயில்களுக்கு எந்தெந்த கிழமைகளில் செல்ல வேண்டும்? அமாவாசையில் தரிசித்தால் என்னவாகும்?
சென்னை: சிவன் கோயில்களுக்கு எந்தெந்த நேரங்களில் எந்தெந்த கிழமைகளில் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியுமா? இது போன்ற சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களுடன் சிவனை வழிபட்டால் மங்காத செல்வமும் ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்கும்ய
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: சிவன் கோவிலுக்கு செல்லும் நேரமும், பலன்களும் :
* ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் விலகி, தைரியம் ஏற்படும்.
* திங்கட்கிழமையில் வரும் அமாவாசை அன்று ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மன வியாதிகள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகள் மாறும் .

* செவ்வாய்கிழமை எமகண்ட நேரத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட முடியும் .
* புதன்கிழமை சிவ பெருமானை முதல் தரிசனம் செய்ய அல்லது அபிஷேகம் செய்ய தொழில் மற்றும் வேலையில் வளர்ச்சி, உயர் பதவி கிடைக்கும் .
* வியாழக்கிழமை இரவு கடைசி தரிசனம் (பள்ளியறைக்கு பெருமானை அனுப்புதல்) செய்தால் இணையில்லா செல்வம் கிடைக்கும் .
* வெள்ளிக்கிழமையும் பௌர்ணமியும் சேரும் காலத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் சிவ பெருமானை தரிசனம் செய்தால் மஹா லக்ஷ்மி அருள் கிடைக்கும்.

* சனிக்கிழமை ராகு காலத்தில் சிவ பெருமானை தரிசனம் செய்தால் கர்மவினைகள் கலைந்து விடும்.
* நம்முடைய மனதால் , எண்ணத்தால் , வாக்கில் கீழ்கண்ட அஷ்ட சிம்மாசன நாமம் சொல்லலாம். இவற்றை சொல்லுவதாலும் சிவனின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
1.ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நம
3.ஸ்ரீ ருத்ராய நம
4.ஸ்ரீ பசுபதே நம
5.ஸ்ரீ உக்ராய நம

6.ஸ்ரீ மகாதேவாய நம
7.ஸ்ரீ பீமாய நம
8.ஸ்ரீ ஈசானாய நம
இவைகளை சொல்ல முடியாவிட்டால் "சிவாய நம" என்று எளிமையான பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லி வழிபடலாம். ஓம் சிவாய நம ஹ என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications