திருவண்ணாமலை ஆடி மாத பவுர்ணமி! கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
திருவண்ணமலை: ஆடி மாத பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது தெரியுமா? நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்குமே. பஞ்ச பூதங்களில் நெருப்பு வடிவமாக திருவண்ணாமலையில் ஈஸ்வரன் காட்சியளிக்கிறார்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந் தேதி, இன்று தொடங்குகிறது.

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி பவுர்ணமி வருகிற 20-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது.
பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி வருவதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications