திருநள்ளாறு சனீஸ்வர கோயிலில் நவக்கிரக சன்னிதி இல்லாதது ஏன்? காளஹஸ்தியிலும் இல்லையே!
சென்னை: திருக்கடையூர், திருநள்ளார் உள்ளிட்ட கோயில்களில் நவக்கிரகங்கள் ஏன் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிவன் கோயில் என்றாலே நவக்கிரகங்களும் இருக்கும். ஆனால் சில கோயில்களில் அவை இல்லை. இதற்கு ஒரு கதை உண்டு.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவக்கிரகங்கள் இருக்காது என்பதை பற்றி விளக்கும் எளிய கதை

🌺 தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம் பெற்றிருக்கும்.
🌺நவக்கிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவாலயங்கள் கோளிலி தலங்கள் எனப்படுகின்றன.
🌺இத்தலங்களில் வணங்க எம வாதனை இருக்காது. வினைகள் அறும். முக்தி சித்திக்கும். எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவக்கிரகங்கள் இருக்காது.
🌺திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவக்கிரகம் இல்லை. ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம்.
🌺திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவக்கிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
🌺ஸ்ரீவாஞ்சியம். இங்கு எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.
🌺திருவாவடுதுறை. இங்கு எமன் சிவனை வழிபட்டதாக வரலாறுகள் உள்ளன.
🌺திருப்பைஞ்சீலி, வாழை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் கிடையாது.
🌺திருக்கடையூர் மானிடர்களின் உயிரைப் பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக ஐதீகம்
🌺காளஹஸ்தி. பஞ்சபூத தலங்களில் இது வாயு ஸ்தலம். அங்கு ஒன்பது படிகள் கொண்ட தங்க ஏணியில் ஒவ்வொன்றிலும் மூன்று மலர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
🌺இந்த 3*9 என்பது 27 நட்சத்திரத்தைக் குறிக்கும். 27 நட்சத்திரங்களும் இந்த ஏணியில் ஆவாகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏணி சிவலிங்கத்தின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதைத் தீபாராதனை காட்டும் போது மட்டும் தான் பார்க்க முடியும்.
🌺திருமழபாடி. திருவையாற்றுக்கு அருகில் உள்ளது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை.திருவெண்காடு. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விடப் பழமையானவர்.திருப்புறம்பியம். இங்கும் நவக்கிரகம் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications