Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தப்பி தவறியும் அசைவம் சனிக்கிழமை சாப்பிடாதீங்க! இந்த பொருளை வாங்காதீங்க! சனி பகவான் அருளை பெற டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்மீகத்தில் மற்ற கிழமைகளைவிட சனிக்கிழமை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? சனிக்கிழமையன்று சில காரியங்களை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்ல என்ன காரணம்? எந்தெந்த பொருட்களை வீட்டிற்கு அன்றைய தினம் வாங்கக்கூடாது என்பார்கள்? சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடலாமா? சனிக்கிழமைகளில் தெரியாமல் அசைவம் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வது? இவைகளை பற்றியெல்லாம் இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.

சனிக்கிழமை என்பது சனி பகவானுக்குரிய நாளாகும். ஒருவரின் செயலுக்கேற்ப அவரது நன்மை தீமைகளை வழங்குபவர் சனி பகவான்தான்.. அதனால்தான் பலரும் சனி பகவானுக்கு பயப்படுகிறார்கள். அவரது கோபப் பார்வையிலிருந்தும் தப்பிக்க நினைக்கிறார்கள்.. எனவே, சனி பகவானுக்குரிய செயல்களை மட்டுமே சனிக்கிழமைகளில் செய்வது, அவரது நேரடியான அருளை பெற உதவும்..

non veg Saturdays

உடுத்தக்கூடாத நிறங்கள்

உதாரணத்துக்கு, கருப்பு நிறம் சனி பகவானுக்கு உகந்ததாக கருதப்படுவதால், சனிக்கிழமையன்று கருப்பு நிறம் அணிந்தால் சனிபகவானின் அருள் கிடைக்கும். ஜாதகத்தில் சனி தோஷம் அல்லது ஏழரை சனி உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட கருப்பு நிறத்தை அணியலாம்.. நீலநிறமும் அணியலாம்.

அதேபோல, சனிக்கிழமைகளில் ஒரு சிறிய நீலம் அல்லது கருப்பு துணியை பர்ஸில் போட்டு வைப்பது நல்லது. ஆனால் சனிக்கிழமைகளில் செவ்வாய் கிரகத்தின் நிறமான சிவப்பு நிற ஆடையை அணிய கூடாது.. சிகப்பு நிற பொருட்களையும் வாங்கக்கூடாது. எதிரெதிர் கிரகம் என்பதால், சனிக்கிழமைகளில் செவ்வாய் நிறத்தை தவிர்க்க சொல்கிறார்கள்.

வாங்கக்கூடாத பொருட்கள்

அதேபோல, இரும்பு பொருட்கள் சனிபகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருள் என்பதால், சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருளை வாங்கவே கூடாது.. இரும்பை அன்றைய தினம் பயன்படுத்தினால் குடும்பத்தில் மோதல்கள் வெடிக்கும்.. முடிந்தால் சனியன்று, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை பிறருக்கு தானம் தரலாம். இதனால் கடனிலிருந்தும் விடுபட முடியும்.

சனிக்கிழமைகளில் எண்ணெய், கல் உப்பு, எள் விதைகள், மாவு பொருட்களை வாங்கக்கூடாது.. நிலக்கரி, உப்பு, மர பொருட்களையும் தவிர்க்கலாம்.. தோஷம் இருப்பவர்கள், சனிக்கிழமையன்று, சுத்தமான செருப்புகளை பிறருக்கு தானம் செய்யலாம்.

சனிக்கிழமை பால் பொருட்கள்

அதேபோல, சனிக்கிழமைகளில், பால் பொருட்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பார்கள்.. பால் பொருட்கள் சாப்பிட வேண்டி இருந்தால், அதில் மஞ்சள் அல்லது வெல்லம் கலந்து சாப்பிடலாம்.

அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.. அதிலும், சனிக்கிழமை அன்று விரதம் கடைபிடிப்பவர்கள், பெருமாளை வழிபடக் கூடிய நபர்கள் அன்றைய தினத்தில் அசைவ உணவுகள் சாப்பிட கூடாது என்கிறது ஆன்மீகம். சனி பகவான் அசைவ உணவை சாப்பிடுபவர்கள், அல்லது சமைப்பவர்களை தண்டிப்பாராம்.. அதனால்தான், இந்த நாளில் அசைவம் உண்ணக்கூடாது என்கிறார்கள்.

அசைவம் சாப்பிடலாமா?

இதற்கு அறிவியல் காரணங்களும் உள்ளன.. சனிக்கிழமைகளில் நிலவின் தாக்கம் பூமியின் மேல் அதிகம் இருக்கும் என்பதால் நமக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல, இதுபோன்ற நேரங்களில், பூமியில் நிலவின் தாக்கத்தால் நம்முடைய செரிமான அமைப்பு லேசாக பலவீனமடைகிறதாம்.. எனவே, செரிமான பிரச்சனைகள் அதிகமாகி, உடல்நல தொந்தரவுகளும் ஏற்படலாம். அதனால்தான், சனிக்கிழமைகளில் அசைவம், பால் பொருட்களை அதிகம் சாப்பிடக்கூடாது என்று அறிவியல் காரணத்தையும் நம் முன்னோர்கள் அறிந்து கடைப்பிடித்து வந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+