திடீரென முடங்கிய ஏர்டெல்.. கால் & டேட்டா என எதுவும் வேலை செய்யல! பல ஆயிரம் பேர் பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனத்தின் சேவை முடங்கியுள்ளது. கால் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை என்று பல ஏர்டெல் யூசர்கள் புகார் அளித்துள்ளனர்.

நமது நாட்டில் மொபைல் மூலமாகவே பலரும் இணையச் சேவை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் டெலிகாம் நிறுவனங்கள் இங்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

airtel

இதற்கிடையே நமது நாட்டின் டாப் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இன்று முடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏர்டெல் யூசர்கள் பலரால் கால் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை..

இது ஏர்டெல் மொபைல் மற்றும் பிராட்பேண்ட் பயனர்களைப் பாதித்துள்ளது. இதனால் அவர்களால் அழைப்புகள் செய்யவோ அல்லது இணையத்தை அணுகவோ முடியவில்லை. பல ஆயிரம் பேர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பல யூசர்கள் தங்கள் மொபைலில் ஏர்டெல் சிம் 'நெட்வொர்க் இல்லை' ('No Network') என்றே காட்டுவதாகவும் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் சார்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+