போனா வராது.. பொழுது போனா கிடைக்காது! குறைந்தவிலையில் சாம்சங் அறிமுகப்படுத்தும் ஃபிளிப் மொபைல்
சென்னை: சமீப நாட்களாக சாம்சங் மொபைல் நிறுவனம் புதிய புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது. இதில் அதிகமான கவனத்தை ஈர்த்தது மடிக்கக்கூடிய வகையில் உள்ள ஃபிளிப் ஸ்மார்ட் போன்தான். ஆனால் இந்த மாடலின் விலை அதிகம். எனவே சாமானிய மக்களும் வாங்கும் வகையில் புதிய மாடல் ஃபிளிப் ஸ்மார்ட் போனை சாம்சங் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆன்டிராய்டு மொபைல்கள் வருவதற்கு முன்னரே மடிக்கும் வகையில் மொபைல்கள் வந்துவிட்டன. மோட்ரோலா நிறுவனத்தின் ரேசர் வகை ஃபிளிப் போன்களை பார்க்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது. இப்படியாக ஆன்டிராய்டு இல்லாத காலகட்டங்களிலும் மோட்டோ நிறுவனம் இந்த வகை போன்களை அறிமுகப்படுத்தி கலக்கியது. ஆனால் காலப்போக்கில் ஆன்டிராய்டு புதிய மாற்றத்தை ஏற்படுத்த, சாம்சங் இதில் கோலோச்ச தொடங்கியது.

நோக்கியா, மோட்டோ எல்லாம் ஓரம் போ.. என்று கூவியவாறு ஸ்மார்ட் போன் சந்தையை சாம்சங் தன்வசப்படுத்தியது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, தற்போது ஃபிளிப் ஸ்மார்ட் மொபைல் என்கிற லெவலுக்கு வந்திருக்கிறது. இதை பார்த்த மோட்டோ, அட இந்த ஃபிளிப் மொபைலுக்கு நாமதானே அடித்தளம் போட்டோம்? என அதுவும் ரேசர் வரிசையில் புதிய ஃபிளிப் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக மொபைல் உலகில் இந்த ஃபிளிப் போன்கள்தான் தற்போது டிரெண்டிங்.
ஆனால் சாமானிய மக்கள் இதனை வாங்கி பயன்படுத்த முடியாத அளவுக்கு இதன் விலை அதிகமாக இருக்கிறது. தொடக்க விலையே ரூ.60-70 ஆயிரம் என இருப்பதால் இது தற்போது வரை பணக்காரர்களுக்கான மொபைல்களாகதான் இருக்கிறது. இந்த நிலையை மாற்ற சாம்சங் முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சாமானிய மக்களும் பயன்படுத்தும் குறைந்த விலையில் ஃபிளிப் போன்களை சந்தையில் களமிறக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது.
ட்ரெண்ட்ஃபோர்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் இந்த தகவலை தெரிவித்திருக்கிறது. வரும் 2024ம் ஆண்டில் இந்த போன்கள் சந்தைக்கு வரலாம் என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது. தற்போது உள்ள ஃபிளிப் ஸ்மாட் போன்களில், வயர்லெஸ் சார்ஜிங் வசதியும், வாட்டர் ஃபுரூப் வசதி இருக்கிறது. இதுவே சாமானிய மக்களுக்கான விலையில் வரும் போன்களில் இந்த வசதிகள் இருக்காது என்றும், கேமராக்களிலும், சாதாரண லென்சையே பயன்படுத்த போவதாகவும் சொல்லப்படுகிறது.
எப்படி இருந்தாலும் இந்த மாதிரி ஸ்மார்ட் போன்கள் சந்தைக்கு வந்தால் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். முன்பதிவுகள் அதிகமாக இருக்கும். அதேபோல சாதாரண விலையில் ஃபிளிப் போன்களை சந்தைக்கு கொண்டு வந்த முதல் ஸ்மார்ட் போன் நிறுவனம் எனும் பெயரையும் சாம்சங் பெறும். இது அதன் சந்தை மதிப்பை உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications