“வானில் பறக்கும் உளவாளி”.. உளவு பார்க்கும் பலூன் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியா!
டெல்லி: விண்ணைத் தாண்டி உளவு பார்க்கும் பலூனை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது இந்தியா. டி.ஆர்.டி.ஓ உள்நாட்டிலேயே வடிவமைத்த அதி உயர ஸ்ட்ரேட்டோஸ்பெரிக் ஏர் ஷிப் அண்மையில் மத்திய பிரதேசத்தில் சோதனை நடத்திப் பார்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பாக நாடுகள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் நிலவி வருகிறது. அண்மையில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்து பதிலடி கொடுத்தது. நாடுகளின் எல்லைகள், அண்டை நாடுகள், எதிரி நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆபரேஷன் சிந்தூர்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் அதிநவீன விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தாக்குதல்கள் முப்படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), அதிஉயர உளவு பணிகளுக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய அடுக்கு மண்டல ஏர் ஷிப்பின் முதல் வெற்றிகரமான பறத்தல் சோதனையை நிகழ்த்தியுள்ளது.
ஏர் ஷிப் சோதனை
மத்திய பிரதேசத்தில் உள்ள ஷியோபூர் சோதனை தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏர்ஷிப், கருவிகளை சுமந்து கொண்டு 17 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. சுமார் 62 நிமிடங்கள் வானில் பறந்த பின்னர் இது வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஏர் ஷிப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், எதிர்கால பணிகளுக்காக இந்த தளத்தை மேலும் மேம்படுத்த பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காற்றை விட மெல்லிய இந்த அமைப்பு இந்தியாவின் புவி கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும். இதன் மூலம் இத்தகைய உள்நாட்டு திறன்களைக் கொண்ட உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்" என்று DRDO தனது எக்ஸ் தளத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
உளவு பார்க்கும் பலூன்
அடுக்கு மண்டல உளவு பலூன்கள் பெரும்பாலான போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட உயரத்தில் பறக்கும் திறன் கொண்டவை. இதனால் அவை எந்த தடையும் இன்றி மேலிருந்து கண்காணிக்க முடியும். பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களைப் போலல்லாமல், இந்த வான் கப்பல்கள் இலக்குகளின் மீது நீண்ட நேரம் வட்டமிட்டு தொடர்ச்சியாகவும் கண்காணிக்கக் கூடியவை.
இருப்பினும், இத்தகைய உயரங்களில் ஏர்ஷிப்பை பராமரிப்பது பல சவால்களை உள்ளடக்கியது. பலத்த காற்று மற்றும் நிலையற்ற வானிலை ஆகியவை இதில் முக்கியமானவை. இந்தியா தனது சொந்த கண்காணிப்பு பலூன் திறன்களை மேம்படுத்தி வரும் அதே வேளையில், இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் தயாராகி வருகிறது.
விண்ணைத் தாண்டி உளவு பலூன்
கடந்த அக்டோபர் 2024 இல், இந்திய விமானப்படை ரஃபேல் போர் விமானங்களைப் பயன்படுத்தி ஏர்ஷிப் பலூன்களை இடைமறிக்கும் பயிற்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த புதிய தொழில்நுட்பம், வான்வழி உளவுத்துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு இது ஒரு முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த வெற்றிகரமான ஸ்ட்ரேட்டோஸ்பெரிக் ஏர் ஷிப் சோதனை, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு திறன்களுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிப்பிடுகிறது. இந்த சாதனைக்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ குழுவை வாழ்த்தி இருக்கிறார்.
-
ரேடாரில் சிக்காது.. ஈரான் அருகே ராட்சச போர்க்கப்பலை இறக்கிய இந்தியா! அமெரிக்காவுக்கு பதிலடியா? -
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை.. உண்மை இதுதான் -
இந்தியாவை நெருங்கிய போர்.. சைலண்ட் மோடில் மத்திய அரசு! இலங்கை அசத்துதே! -
கடலில் தவித்த ஈரான் போர்க்கப்பல்.. அமெரிக்காவிடம் சிக்காமல் காப்பாற்றிய இந்தியா! பரபரப்பு சம்பவம் -
இஸ்ரேலை நம்பாத இந்தியா! ஆயுத கொள்முதலில்.. ரஷ்யாவுடன் சைலண்டாக டீல் முடிந்தது! -
வீட்டை விட்டு வெளியேற தடை.. ஜன்னல் பக்கம் போகாதீங்க.. கத்தார் வாழ் இந்தியர்களுக்கு பறந்த வார்னிங் -
30 நாட்கள்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க.. அமெரிக்காவிடம் அனுமதி பெற்ற இந்தியா! -
அந்த 15 நிமிடம்.. ஒரு டின்னரில் மொத்தமாக அழிந்து போன நேபாள அரசு குடும்பம்.. என்ன நடந்தது தெரியுமா? -
பறிபோன இந்திய உயிர்கள்.. ஈரான் தாக்குதலில் கேப்டன் ஆஷிஷ் உட்பட இருவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல் -
"வேண்டாம்.." இதுவரை ஒரே ஒரு அமெரிக்க போர் விமானத்தை கூட வாங்காத இந்தியா.. என்ன காரணம் தெரியுமா? -
UPSC தேர்வு முடிவுகள்.. அகில இந்திய அளவில் தமிழக மாணவி ராஜேஸ்வரி 2ஆம் இடம்! மற்றொரு மாணவர் 7வது இடம் -
கண்ட்ரோலை எடுக்கும் பாஜக! ஒரு காலத்தில் பீகாரில் மோடியை.. கால் வைக்க விடாத நிதிஷுக்கு நேர்ந்த கதி!












Click it and Unblock the Notifications