Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஐபோனை அழிக்கும் அமெரிக்கா.." ஆப்பிள் நிறுவனம் பரபர குற்றச்சாட்டு.. என்ன நடக்கிறது! யார் மீது தவறு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்கச் சட்டத்துறை தொடர்ந்து வழக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் தனித்துவத்தையே முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் இருப்பதாக ஆப்பிள் விமர்சித்துள்ளது.

உலகில் இப்போது இருக்கும் முக்கியமான டெக் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். குறிப்பாக அதன் ஐபோன்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை. ஆப்பிள் எவ்வளவு காஸ்ட்லியாக இருந்தாலும் அதை வைத்திருந்தால் கெத்து என்பதற்காகவே பலரும் அதை வாங்குவார்கள்;

What is the antitrust case between Apple vs USA over tech giants monopoly


அதேநேரம் ஆப்பிள் நிறுவனம் மற்ற டெவலர்பர்கள் ஐபோன்களில் எதையுமே செய்ய முடியாத அளவுக்கு வைத்துள்ளதாகவும் இது போட்டியை முழுமையாக காலி செய்வதாகவும் புகார்கள் இருந்தது. சமீப நாட்களில் பலரும் இது குறித்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

புதிய வழக்கு: இந்தச் சூழலில் அமெரிக்க நீதித்துறை ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் வேறு எந்தவொரு நிறுவனத்தையும் வளர விடாமல் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆப்பிள் அதன் மென்பொருள் மற்றும் ஹாட்வேர் அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் போட்டியைத் தடுத்துள்ளதாக அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களில் குறிப்பிட்ட மாற்றங்களை

ஐபோனில் இருக்கும் ஐமெசேஜ் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற ஆப்பிள் தயாரிப்புகளின் மற்ற ஆண்டிராய்டு சாதனங்களுடன் இணைந்து செயல்பட முடியாது. ஓபன் ஸ்மார்ட்போன் சந்தை இருக்க வேண்டியது கட்டாயம் என்று அமெரிக்கச் சட்டத்துறை கூறுகிறது. மேலும், ஆப்பிள் இந்தளவுக்கு வளர அவர்கள் சேவை மட்டும் காரணம் இல்லை. அத்துடன் ஆப்பிள் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்ற நிறுவனங்கள் வளராமல் தடுத்ததும் அதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

"இன்னும் ஒரே ஆண்டு.." AI தொழில்நுட்பம் மனிதர்களையே தூக்கி சாப்பிட்டுவிடும்.. எலான் மஸ்க் பரபர அலர்ட்


ஆப்பிள் விமர்சனம்: ஆனால், இதற்கு ஆப்பிள் கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறது. தங்கள் தனித்துவத்தையே குலைக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசு ஐபோனை ஆண்ட்ராய்டு மொபைல் போல மாற வேண்டும் என்று விரும்புவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஆப்பிள் நிறுவனம், இது சட்டப்படி தவறான வழக்கு என்றும் இது தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் வழங்கும் சேவையைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் மேலும் கூறுகையில், "இந்த வழக்கு எங்கள் அடிப்படைக்கே எதிராக இருக்கிறது. இந்த வழக்கு எங்களுக்கு எதிராக அமைந்தால் அது ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் எங்கள் திறனைத் தடுக்கும். மேலும், மக்களின் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அரசுக்கு அதிக அதிகாரம் அளிக்கும். இது தவறான முன்னுதாரணமாகவும் மாறும்" என்று கூறப்பட்டுள்ளது.

என்ன நடக்கும்: இருப்பினும், அமெரிக்க அரசு இதை வேறு மாதிரி கூறுகிறது. அதாவது ஆப்பிள் நிறுவனம் தனது கட்டமைப்பில் வேறு நிறுவனங்களை அனுமதிப்பதில்லை. இது மற்ற நிறுவனங்களின் வாய்ப்பை முழுமையாக அழிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது, மேலும் அவர்கள், "ஆப்பிள் நிறுவனம் தடைகளை உருவாக்குகிறது. பயனர்கள் மற்றும் டெவலப்பர்கள் என இருவருக்கும் எதிராக இருக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எப்படிப் போகிறது.. என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பது ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கும். இது ஐபோன்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வரலாற்றைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+