Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படிப்பை விட்டு நடிக்க வந்த காரணம்..ஆனால் அந்தப் படத்தில் வாங்கிய அடி..மனம் திறந்த நடிகை சீதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சீதா தான் சினிமாவில் எப்படி அறிமுகமானேன் என மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய வாழ்க்கை இருந்த நிலையும் இன்று தன்னுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்று பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

 A video about why actress Seetha came to act and her first film experience

80ஸ் கிட்ஸ்களின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சீதா ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் பிஸியாக நடித்த நடிகையாக இவர் இருந்தாலும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் கூட இவர் நடித்திருக்கிறாராம். பல நேரங்களில் படங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலையில் பல வாய்ப்புகளை கூட இவர் ஒதுக்கி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு திருமண ஃபங்ஷனில் பட்டுப்பாவாடையில் கலந்து கொண்டிருந்தாராம். அதை பார்த்த இயக்குனர் இவருடைய வீட்டிற்க்கே சென்று இவரை திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தபோது இவர் அதற்கு சம்மதிக்கவில்லையாம். எனக்கு விருப்பமில்லை என்று கூறி இருக்கிறார். ஆனால் தொடர்ந்து அவர்கள் பேசி அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.

 A video about why actress Seetha came to act and her first film experience

அப்போது முதல் திரைப்படத்தில் இவருக்கு ஒரு குடத்தை கூட தூக்க தெரியாமல் இயக்குனரிடம் கையில் அடி வாங்கி இருந்தாராம். பிறகு நான் இனி நடிக்க போகவே மாட்டேன் என்று வீட்டில் கூறி இருந்தாராம். காரணம் அவருடைய வீட்டில் இவர் ஒரு செல்ல பிள்ளையாக இருந்திருக்கிறார். அமைதியாக இருக்கும் இவரை யாரும் அதட்டி கூட பேச மாட்டார்களாம். அப்படி வளர்ந்த நிலையில் ஒருவர் இவரை அடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் இவர் வீட்டில் புலம்பி இருக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் பிறகு இவருக்கு அறிவுரை கூறி மீண்டும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இவர் நடிக்க வருவதற்கு காரணமே சூட்டிங் ஸ்பாட்டில் இவருக்கு அதிகமாக ஐஸ்கிரீம் கிடைக்கும் என்றும், கைகளில் அதிகமான வளையல் போடலாம் என்றும், ஒவ்வொரு வேலைகளை செய்வதற்க்கும் தனித்தனியாக ஆட்கள் இருக்கிறார்கள் என்றும், தான் ஸ்கூலுக்கு போனால் படிக்க வேண்டும் ஆனால் நடிக்க வந்தால் தமக்கு வேலை செய்ய பலர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட இவர் அப்படியே அதை தொடர ஆரம்பித்துவிட்டேன் என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.

 A video about why actress Seetha came to act and her first film experience

என்னதான் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தாலும், பலருடைய சீதா வெள்ளி திரையில் அவருடைய மார்க்கெட் குறைய தொடங்கியதும், சின்னத்திரையை பயன்படுத்திக் சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்து இருக்கிறார். தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். வீட்டிலேயே மாடி தோட்டம் அமைத்து வீட்டில் இருக்கும் நேரங்களில் பசுமையை பாராட்டி வருகிறார். தற்போது இவர் ஆரம்ப காலம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+