படிப்பை விட்டு நடிக்க வந்த காரணம்..ஆனால் அந்தப் படத்தில் வாங்கிய அடி..மனம் திறந்த நடிகை சீதா
சென்னை: நடிகை சீதா தான் சினிமாவில் எப்படி அறிமுகமானேன் என மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய வாழ்க்கை இருந்த நிலையும் இன்று தன்னுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்று பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

80ஸ் கிட்ஸ்களின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சீதா ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் பிஸியாக நடித்த நடிகையாக இவர் இருந்தாலும் ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் கூட இவர் நடித்திருக்கிறாராம். பல நேரங்களில் படங்களுக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலையில் பல வாய்ப்புகளை கூட இவர் ஒதுக்கி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு திருமண ஃபங்ஷனில் பட்டுப்பாவாடையில் கலந்து கொண்டிருந்தாராம். அதை பார்த்த இயக்குனர் இவருடைய வீட்டிற்க்கே சென்று இவரை திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தபோது இவர் அதற்கு சம்மதிக்கவில்லையாம். எனக்கு விருப்பமில்லை என்று கூறி இருக்கிறார். ஆனால் தொடர்ந்து அவர்கள் பேசி அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.

அப்போது முதல் திரைப்படத்தில் இவருக்கு ஒரு குடத்தை கூட தூக்க தெரியாமல் இயக்குனரிடம் கையில் அடி வாங்கி இருந்தாராம். பிறகு நான் இனி நடிக்க போகவே மாட்டேன் என்று வீட்டில் கூறி இருந்தாராம். காரணம் அவருடைய வீட்டில் இவர் ஒரு செல்ல பிள்ளையாக இருந்திருக்கிறார். அமைதியாக இருக்கும் இவரை யாரும் அதட்டி கூட பேச மாட்டார்களாம். அப்படி வளர்ந்த நிலையில் ஒருவர் இவரை அடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் இவர் வீட்டில் புலம்பி இருக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் பிறகு இவருக்கு அறிவுரை கூறி மீண்டும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
இவர் நடிக்க வருவதற்கு காரணமே சூட்டிங் ஸ்பாட்டில் இவருக்கு அதிகமாக ஐஸ்கிரீம் கிடைக்கும் என்றும், கைகளில் அதிகமான வளையல் போடலாம் என்றும், ஒவ்வொரு வேலைகளை செய்வதற்க்கும் தனித்தனியாக ஆட்கள் இருக்கிறார்கள் என்றும், தான் ஸ்கூலுக்கு போனால் படிக்க வேண்டும் ஆனால் நடிக்க வந்தால் தமக்கு வேலை செய்ய பலர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட இவர் அப்படியே அதை தொடர ஆரம்பித்துவிட்டேன் என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.

என்னதான் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தாலும், பலருடைய சீதா வெள்ளி திரையில் அவருடைய மார்க்கெட் குறைய தொடங்கியதும், சின்னத்திரையை பயன்படுத்திக் சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்து இருக்கிறார். தற்போது ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். வீட்டிலேயே மாடி தோட்டம் அமைத்து வீட்டில் இருக்கும் நேரங்களில் பசுமையை பாராட்டி வருகிறார். தற்போது இவர் ஆரம்ப காலம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications